குர்ஆன் அவமதிப்பு வழக்கு

அடுத்த தவணைக்கு முன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்தரவு புனித குர்­ஆனை அவ­ம­தித்­த­தாக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்த...



அடுத்த தவணைக்கு முன் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க உத்தரவு

புனித குர்­ஆனை அவ­ம­தித்­த­தாக பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மீது குற்றம் சுமத்தி தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கும் மற்றும் கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் நடை­பெற்ற ஜாதி­க­ ப­ல சேனா அமைப்பின் ஊடக மாநாட்­டினுள் பலாத்­கா­ர­மாக பிர­வே­சித்து குழப்பம் விளை­வித்­த­தாக ஞான­சார தேரர் மீதும் மற்றும் 6 பொது­பல சேனா அமைப்பைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கும் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­டது.

கொழும்பு கோட்டை நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் இவ்­வ­ழக்­குகள் விசா­ர­ணைக்­கெ­டுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சா­ர ­தே­ரரும் ஏனைய சந்­தேக நபர்­களும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

சம்­பவம் நிகழ்ந்­த­போது தொலைக்­காட்சி ஊட­கங்­க­ளினால் பதிவு செய்­யப்­பட்ட ஒளிப்­ப­திவு ஆய்­வு­க­ளுக்­காக மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் பல்­க­லைக்­க­ழகம் இது­வரை அது தொடர்­பான அறிக்­கையை அனுப்­பி­ வைக்­க­வில்லை எனவும் பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

நீதிவான் ஒளிப்­ப­திவு அறிக்­கையைப் பெற்றுக் கொண்டு அடுத்த விசா­ரணைத் தவ­ணைக்கு முன்பு குற்றப் பத்­தி­ரி­கையைத் தயா­ரிக்­கு­மாறு உத்­த­ர­விட்­ட­துடன் விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

வாதிகள் தரப்பில் RRT சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

Related

விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்றுள்ள மகிந்தவின் இரகசிய பேச்சுவார்த்தை

எதிர்வரும் பொது தேர்தல் நடவடிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுதந்திர கட்சி மற்றும் கூட்டணியின் அரசியல் கட்சிகள் பலவற்றின் பிரதிநிதிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக தகவ...

ஷரீஆ வங்­கிகளை தடைசெய்ய வேண்டும் – மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநரிடம் BBS வேண்­டுகோள்

நாட்டின் வங்கி முறையை ஷரிஆ சட்டம் ஆக்­கி­ர­மித்துக் கொண்­டுள்­ளது. நாட்டில் இயங்கி வரும் ஷரிஆ வங்­கிகள் பிரி­வினை வாதத்தை ஊக்­கப்­ப­டுத்­து­கின்­றன. அதனால் ஷரீஆ சட்டம் அமுலில் இல்­லாத இந்­நாட்டில் ஷ...

பாராளுமன்ற கலைப்பு இழுபறி நிலையில்! பிரதமர் – முஸ்லிம் அமைச்சர் சந்திப்பு!!

பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் பாராளுமன்ற கலைப்பு என்பது இழுபறி நிலைக்குள் தற்போது உள்ளாக்கப்பட்டுள்ளதாக அறியவருகின்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item