ஷரீஆ வங்­கிகளை தடைசெய்ய வேண்டும் – மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநரிடம் BBS வேண்­டுகோள்

நாட்டின் வங்கி முறையை ஷரிஆ சட்டம் ஆக்­கி­ர­மித்துக் கொண்­டுள்­ளது. நாட்டில் இயங்கி வரும் ஷரிஆ வங்­கிகள் பிரி­வினை வாதத்தை ஊக்­கப்­ப­டுத்­த...



நாட்டின் வங்கி முறையை ஷரிஆ சட்டம் ஆக்­கி­ர­மித்துக் கொண்­டுள்­ளது. நாட்டில் இயங்கி வரும் ஷரிஆ வங்­கிகள் பிரி­வினை வாதத்தை ஊக்­கப்­ப­டுத்­து­கின்­றன. அதனால் ஷரீஆ சட்டம் அமுலில் இல்­லாத இந்­நாட்டில் ஷரீஆ வங்­கிகள் இயங்கி வரு­வது சட்ட விரோ­த­மா­ன­தாகும். இதை தடை செய்ய மத்­திய வங்கி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென பொது­ப­ல­சேனா நேற்று காலை மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநர் கலா­நிதி டப்­ளியூ வீர­சிங்­கவை சந்­தித்து வேண்­டுகோள் விடுத்தது.


மத்­திய வங்­கியின் ஆளுனர் அர்­ஜுன மகேந்­தி­ரனை சந்­தித்து ஷரீஆ வங்கி முறைமை பற்றி கலந்­து­ரை­யாட பொது­ப­ல­சேனா ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்த போதும் மத்­திய வங்­கியின் பிரதி ஆளுனர் டப்­ளியூ. வீர­சிங்­க­வு­டனே பேச்­சு­வார்த்­தை­களை நடத்த வேண்­டி­யேற்­பட்­டது.


ஆளுனர் அர்­ஜுன மகேந்­திரன் பாரா­ளு­மன்­றுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்த கார­ணத்­தினால் பேச்­சு­வார்த்­தை­களில் கலந்து கொள்ள முடி­ய­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது. முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் இந்­நாட்டின் உணவு முறையில் ஹலால் என்ற பெயரில் பிரி­வினை வாதத்தை ஏற்­ப­டுத்­தி­னார்கள். இந்­தக்­குழு நாட்டின் வங்கி முறை­மை­க­ளையும் ஆக்­கி­ர­மித்து கொண்­டுள்­ளது. கல்வி மற்றும் நிதித்­து­றையில் இஸ்­லா­மிய ஆக்­கி­ர­மிப்பு மிகவும் சூட்­சு­ம­மாக பாரா­ளு­மன்­றத்தில் கலந்­து­ரை­யா­டப்­ப­டாது இடம்­பெற்­றுள்­ளது. இதனை தடை செய்­வ­தற்கு கடந்த அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்தும் எது­வித பயனும் ஏற்­ப­ட­வில்லை என்று மத்­திய வங்­கியின் பிரதி ஆளு­ன­ரிடம் விளக்­கப்­பட்­டது.


நேற்று காலை நடை­பெற்ற மத்­திய வங்கி பிரதி ஆளு­ன­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் பொது­பல சேனா அமைப்பின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அமைப்பின் தேசிய அமைப்­பாளர் விதா­ரந்­தெ­னிய நந்­த­தேரர், நிர்­வாக பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த விதா­னகே உட்­பட ஐவர் கலந்து கொண்­டனர். நடை­பெற்ற கலந்­து­ரை­யாடல் தொடர்­பாக பொது­ப­ல­சேனா அமைப்பின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஊட­கங்­க­ளுக்கு பின்­வ­ரு­மாறு கருத்து வெளி­யிட்டார். ஷரீஆ வங்கி முறைமை நாட்டின் சட்­டத்­துக்கு முர­ணாக அமைக்­கப்­பட்­டுள்­ள­தெ­னவும் இதற்கு தடை விதிக்­கு­மாறும் நாம் கடிதம் மூலம் மத்­திய வங்கி ஆளு­னரை கேட்­டி­ருந்தோம். இது தொடர்­பாக அவ­ருடன் பல மின்­னஞ்சல் மூலம் கருத்து பறி­மா­றிக்­கொண்­டுள்ளோம்.


இன்று ஒரு மணித்­தி­யா­லத்திற்கு கலந்து பேசினோம். இலங்­கையின் ஷரிஆ வங்­கி­களின் இலக்கு கோட்­பா­டுகள் தொடர்­பான ஆவ­ணங்­க­ளையும் மத்­திய வங்­கியின் பிரதி ஆளு­ன­ரிடம் காண்­பித்தோம்.

ஷரீஆ வங்கி முறை வங்­கித்­து­றையின் சந்­தைப்­ப­டுத்­தலின் ஓர் அங்­க­மா­கவே ஆரம்­பிக்­கப்­பட்­டது. வங்­கிகள் சந்­தைப்­ப­டுத்­தலின் போது பல்­வேறு பிரி­வு­களை ஆரம்­பிக்­கலாம். வட்­டி­யில்லா வங்கி முறை­யாக இந்த ஷரீஆ வங்கி முறை ஆரம்­பிக்­கப்­பட்­டது என பிரதி ஆளுனர் விளக்­க­ம­ளித்தார். எது எப்­ப­டி­யென்­றாலும் ஷரிஆ வங்கி முறை பிரி­வினை வாதத்தை உரு­வாக்­கி­யுள்­ள­தாக தெளி­வு­ப­டுத்­தினோம் என்றார்.


பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் டிலந்த விதா­னகே ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில் முஸ்­லிம்கள் இந்­நாட்டில் பல்­வேறு வகையில் பிரி­வினை வாதத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றார்கள். ஹலால் உணவு முறை பிரி­வி­னையை உரு­வாக்­கி­யது. இஸ்­லா­மிய வங்கி முறை இப்­போது பிரி­வி­னை­வா­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வாறு பிரி­வினை வாதத்தை தூண்டும் இஸ்­லா­மிய வங்கி முறையை இந்­நா­ட்டில் செயற்­ப­டுத்த முடி­யாது.


இலங்­கையில் 2005 ஆம் ஆண்டு வங்கி சட்­டங்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்ட போது மிகவும் சூட்­சு­ம­மாக இஸ்­லா­மிய வங்கி முறை உட்­பு­குத்­தப்­பட்­டுள்­ளது. ஷரீஆ சட்டம் அமுலில் இல்­லாத இந்­நாட்டில் அச்­சட்­டத்தின் கீழ் வங்கி முறை­யொன்­றினை உரு­வாக்க முடி­யாது.


ஷரீஆ வங்கி ஒரு சமய ரீதி­யான வங்கி முறை என்­பதால் இது சட்ட விரோ­த­மா­ன­தாகும். ஷரீஆ வங்கி முறை தொடர்­பான ஆவ­ணங்கள் இந்­நாட்டின் வங்கி முறை தவ­றா­னது எனத் தெரி­விக்­கின்­றன. நடை­மு­றை­யி­லுள்ள வங்கி முறை மனித சமு­தா­யத்­துக்கு நன்­மை ­ப­யப்­பன அல்ல. வட்­டி­யில்­லாத வங்கி முறையே மனித சமு­தா­யத்­துக்கு சிறந்­தது என அவ் ஆவ­ணங்கள் கூறு­கின்­றன. இதன் மூலம் பிரி­வினை வாதம் பரப்­பப்­ப­டு­கி­றது.


நாம் எந்த ஒரு மதத்­துக்கும் இனத்­துக்கும் எதி­ரா­ன­வர்­க­ளல்ல. ஆனால் பிரி­வி­னை­வா­தத்தை பரப்பும் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள். நாட்டு மக்கள் அனை­வரும் ஒரே சட்­டத்தின் கீழ் ஒற்­று­மை­யாக வாழ வேண்­டு­மென்றே நாம் விரும்­பு­கின்றோம்.


கடந்த கால ஆட்­சி­யா­ள­ரி­டமும் ஷரீஆ வங்கி முறை­பற்றி முறை­யிட்டோம். கடந்த ஆட்­சியில் ஓரி­ரு­வரே தீர்­மா­னங்­களை மேற்­கொள்­ப­வர்­க­ளாக இருந்­தார்கள். ஜெனீவா விவ­கா­ரத்தில் மத்­திய கிழக்கு நாடுகள் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்­கின. இதைக்­காட்டி முஸ்லிம் தலை­வர்கள் தமக்கு தேவை­யா­ன­வை­க­ளுக்கு அத்­தி­வா­ர­மிட்டுக் கொண்­டார்கள்.


முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் ஷரீஆ வங்­கியை நிறு­விக்­கொண்­ட­துடன் பிரி­வினை வாதத்தை ஆத­ரிக்­கின்­றார்கள். இப்­போது கிழக்கில் தங்­க­ளுக்­கென தனி­யான நிர்­வாக மாவட்டம் வேண்டும் எனக் கேட்­கின்­றார்கள். ஆனால் எமது அர­சியல்வாதிகள் எதுவும் பேசு­கின்­றார்கள் இல்லை. ஆட்­சி­யா­ளர்­களும் அமைதியாகவே இருக்­கின்­றார்கள். அதனால் நாம் இவ்­வி­ட­யங்­களில் தலையிட வேண்டியுள்ளது என்றார்.(vi)


Related

தலைப்பு செய்தி 570154418334980919

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item