இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை கோரியது மன்று

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்­பி­லான இறு­தி­யான பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 10 ஆம் திகதி ...


பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் தொடர்­பி­லான இறு­தி­யான பிரேத பரி­சோ­தனை அறிக்­கையை எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 10 ஆம் திகதி மன்றில் சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ர­சே­க­ர­வுக்கு உத்­த­ரவு பிறப்­பித்தார்.

அத்­துடன் சட்ட வைத்­திய அதி­கா­ரியை திறந்த மன்றில் சாட்­சி­ய­ம­ளிக்கச் செய்து அதனை ஒழுங்­கு­ப­டுத்­து­வது குறித்து சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் நீதிவான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு தெரி­வித்தார்.

றக்பி வீரரின் மரண விசா­ரணை தொடர்­பி­லான வழக்கு நேற்று தொடர்ச்­சி­யாக இரண்­டா­வது நாளும் விசா­ர­ணைக்கு வந்த போதே நீதிவான் நிஸாந்த பீரிஸ் இந்த உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்தார்.

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணம் வாகன விபத்தால் ஏற்­ப­ட­வில்லை எனவும் அது ஒரு கொலை என சந்­தே­கிக்கும் படி­யாக உள்­ளது எனவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று முந்­தினம் கொழும்பு மேல­திக நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்ப்­பித்­தனர்.

பற்கள் உடைக்கப் பட்டு, முது­கெ­லும்பு முறிக்­கப்­பட்டு, குதி கால் பகு­தியில் உள்ள எலும்பும் உடைக்­கப்­பட்டு, கூரிய ஆயு­தத்தால் கழுத்தில் குத்­தியும், தட்­டை­யான ஆயுதம் ஒன்­றினால் தாக்­கி­ய­தாலும் றக்பி வீரரின் மரணம் நிக்ழ்ந்­தி­ருக்­கலாம் எனவும் அதற்­கான தழும்­புகள் மற்றும் அடை­யா­ளங்கள் அவ­ரது சட­லத்தில் இருந்­த­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ள­தா­கவும் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறிக்கை சமர்ப்­பித்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று முன் தினம் அறி­வித்­தனர்.

தாஜுடீன் மரணம் தொடர்பில் மரண விசா­ரணை நடத்­திய முன்னாள் சட்ட வைத்­திய அதி­காரி ஆனந்த சம­ரகோன் இடைக்­கால அறிக்கை ஒன்றை மாத்­தி­ரமே சமர்­பித்­த­தாக பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­துள்­ளனர்.

எனவே பூரண மரண விசா­ரணை அறிக்கை நீதி­மன்றில் சமர்­பிக்­கப்­பட வேண்டும் என குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கேட்டுக் கொண்­டனர்.

இந்த கோரிக்­கையை ஏற்றுக் கொண்டு கொழும்பு மேல­திக நீதிவான் நிஷாந்த பீரிஸ், இறு­தி­யான முழு­மை­யான மரண விசா­ரணை அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறு ஆனந்த சம­ர­கோ­னுக்கு தெரி­வித்தார்.

மேலும் தாஜூடீன் மரணம் தொடர்பில் மரண விசா­ரணை நடத்­திய நான்கு சட்ட வைத்­திய அதி­கா­ரி­க­ளையும் நீதி­மன்றில் அழைத்து சாட்சி பெற வேண்டும் என குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கோரிக்கை முன்­வைத்­துள்­ளனர்.

இதனைத் தொடர்ந்து குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெற்று அத­னையும் அன்­றைய தினம் மன்றுக்கு தெரியப்படுத்தும் படி நீதிவான் புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related

தற்போதிய பாராளுமன்றத்தின் நாட்கள் எண்ணப்படுகிறது !!

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தடை ஏற்பட்டால் நாடாளுமன்றம் உடனடியாக கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இட...

’ஊழல் என்ற புற்று நோயை ஒழித்துக்கட்டுவோம்’: உலக தலைவர்களுக்கு பிரதமர் கேமரூன் அழைப்பு.

உலகளவில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் நடைபெறும் மாபெறும் ஊழல்களை ஒழித்து கட்ட சர்வதேச அரசியல் தலைவர்கள் முன் வர வேண்டும் என பிரித்தானிய பிரதமரான கேமரூன் வலியுறுத்த உள்ளார்.ஜேர்மனியில் நாளை நடைபெற...

இந்தோனேஷியாவில் கொல்லப்பட்ட அவுஸ்திரேலியர்கள்: கடுமையான குடியேற்ற கொள்கை தான் காரணமா?

அவுஸ்திரேலியாவின் புதிய குடியேற்ற கொள்கையினால் தான், 2 அவுஸ்திரேலியர்கள் இந்தோனேஷியாவில் கொல்லப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் போதைப் பொருள் கடத்தல் வழ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item