கலாமின் உடல் நாளை ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்
பள்ளிவாசல் மையவாடியிலா? பொது மையவாடியிலா என்பதில் தீர்மானமில்லை மறைந்த இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்லடக்கம் நாள...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_268.html
பள்ளிவாசல் மையவாடியிலா? பொது மையவாடியிலா என்பதில் தீர்மானமில்லை
மறைந்த இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்லடக்கம் நாளை ராமேஸ்வரத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் ராமேஸ்வரம் பள்ளிவாசல் அடக்கஸ்தலம், ராமேஸ்வரம் ஆபில் ஹாபில் தர்கா, பேருந்து நிலையம் அருகே உள்ள பொது மையவாடி ஆகியவற்றில் ஏதாவதொன்றில் அடக்கம் செய்யப்படும் என அவரது பேரனான சேக் சலீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுபற்றி இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் தனது 84 ஆவது வயதில் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.
மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அங்கு திங்கள் மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்றுக் காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் தலைநகர் குவாஹாட்டியில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் குவாஹாட்டி விமான நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
கலாம் உடலை, முப்படை வீரர்களும் பெற்றுக் கொண்டனர். பின்னர் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கலாம் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து இராணுவ மரியாதையுடன் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி ஆகியோர் மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலாம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கலாமின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7 நாள் துக்கம்:
இதேவேளை மத்திய அரசு சார்பில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இருப்பினும் விடுமுறை ஏதும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. 7 நாட்களும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30 இல் இறுதிச் சடங்கு:
நாளை வியாழக்கிழமை ராமேஸ்வரத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறுதிச்சடங்கு:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் ராமேஸ்வரத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
அப்துல் கலாமின் உடலை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வர வேண்டும் என்ற உறவினர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வந்தால் எந்த இடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைப்பது, எவ்விடத்தில் அடக்கம் செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் கே.நந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மயில்வாகனன் ஆகியோர் நேற்று மதியம் ராமேஸ்வரம் வந்தனர்.
தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய அவர்கள் பின்னர், பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு கலாமின் உறவினர்களுடன் ஆலோசனை நடத்திய அவர்கள், நாளையும் நாளை மறுதினமும் நடைபெறும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவசரமாக கிளம்பினர்.
இதுபற்றி ஆட்சியரிடம் கேட்டபோது, "புதன்கிழமை காலை 7 மணிக்கு அப்துல் கலாமின் உடல் டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டுவரப்பட உள்ளது. மதியம் 1 மணிக்கு உடல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம். அஞ்சலி செலுத்துமிடம், அடக்கஸ்தலம் போன்றவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த கலாமின் பேரன் சேக் சலீம் கூறியபோது, "அப்துல் கலாம் அவர்களின் உடலை ராமேஸ்வரம் கொண்டு வந்து, இறுதிச் சடங்குகளைச் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் ஒத்துழைப்புடன் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக செய்து வருகிறது.
நாளை மதியம் 1 மணிக்கு அவரது உடல் ராமேஸ்வரம் வந்து சேரும்.
அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். இரவு 7 அல்லது 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அதைத் தொடர்ந்து மறுநாள் (வியாழன்) காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்.
பொதுமக்களின் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படும் இடம் மற்றும் அடக்கஸ்தலம் பற்றி இப்போது உறுதியாக சொல்லமுடியாது என்றும் கூறினார். ராமேஸ்வரத்தில் நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் உடல் வைக்கப்படும் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் பள்ளிவாசல் அடக்கஸ்தலம், ராமேஸ்வரம் ஆபில் ஹாபில் தர்கா, பேருந்து நிலையம் அருகே உள்ள பொது மையவாடி ஆகியவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்லடக்கம் நாளை ராமேஸ்வரத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் ராமேஸ்வரம் பள்ளிவாசல் அடக்கஸ்தலம், ராமேஸ்வரம் ஆபில் ஹாபில் தர்கா, பேருந்து நிலையம் அருகே உள்ள பொது மையவாடி ஆகியவற்றில் ஏதாவதொன்றில் அடக்கம் செய்யப்படும் என அவரது பேரனான சேக் சலீம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுபற்றி இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் தனது 84 ஆவது வயதில் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் உயிரிழந்தார்.
மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அங்கு திங்கள் மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்றுக் காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் தலைநகர் குவாஹாட்டியில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உடல் குவாஹாட்டி விமான நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
கலாம் உடலை, முப்படை வீரர்களும் பெற்றுக் கொண்டனர். பின்னர் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கலாம் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, கலாம் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து இராணுவ மரியாதையுடன் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி ஆகியோர் மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலாம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கலாமின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7 நாள் துக்கம்:
இதேவேளை மத்திய அரசு சார்பில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இருப்பினும் விடுமுறை ஏதும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. 7 நாட்களும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30 இல் இறுதிச் சடங்கு:
நாளை வியாழக்கிழமை ராமேஸ்வரத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறுதிச்சடங்கு:
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் ராமேஸ்வரத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
அப்துல் கலாமின் உடலை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு வர வேண்டும் என்ற உறவினர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொண்டு வந்தால் எந்த இடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைப்பது, எவ்விடத்தில் அடக்கம் செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் கே.நந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மயில்வாகனன் ஆகியோர் நேற்று மதியம் ராமேஸ்வரம் வந்தனர்.
தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய அவர்கள் பின்னர், பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு கலாமின் உறவினர்களுடன் ஆலோசனை நடத்திய அவர்கள், நாளையும் நாளை மறுதினமும் நடைபெறும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவசரமாக கிளம்பினர்.
இதுபற்றி ஆட்சியரிடம் கேட்டபோது, "புதன்கிழமை காலை 7 மணிக்கு அப்துல் கலாமின் உடல் டெல்லியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டுவரப்பட உள்ளது. மதியம் 1 மணிக்கு உடல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம். அஞ்சலி செலுத்துமிடம், அடக்கஸ்தலம் போன்றவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த கலாமின் பேரன் சேக் சலீம் கூறியபோது, "அப்துல் கலாம் அவர்களின் உடலை ராமேஸ்வரம் கொண்டு வந்து, இறுதிச் சடங்குகளைச் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் ஒத்துழைப்புடன் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக செய்து வருகிறது.
நாளை மதியம் 1 மணிக்கு அவரது உடல் ராமேஸ்வரம் வந்து சேரும்.
அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். இரவு 7 அல்லது 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அதைத் தொடர்ந்து மறுநாள் (வியாழன்) காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்" என்றார்.
பொதுமக்களின் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படும் இடம் மற்றும் அடக்கஸ்தலம் பற்றி இப்போது உறுதியாக சொல்லமுடியாது என்றும் கூறினார். ராமேஸ்வரத்தில் நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் உடல் வைக்கப்படும் என்று ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் பள்ளிவாசல் அடக்கஸ்தலம், ராமேஸ்வரம் ஆபில் ஹாபில் தர்கா, பேருந்து நிலையம் அருகே உள்ள பொது மையவாடி ஆகியவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.