தெஹிவளையில் கடத்தப்பட்ட தமிழ் ,முஸ்லிம் மாணவர்கள் கோத்தா முகாமிலா அல்லது கொல்லப்பட்டு விட்டனரா ?

தெஹிவளையில் கடத்தப் பட்ட ஐந்து தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா ? அல்லது கொல்லப்பட்டு விட்டனரா ...

தெஹிவளையில் கடத்தப் பட்ட ஐந்து தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா ? அல்லது கொல்லப்பட்டு விட்டனரா ? இது குறித்து நீதிமன்றம்  கவனம் செலுத்த வேண்டும் என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
GOதெஹி­வ­ளையில் 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் ் மூன்று தமிழ் மாண­வர்­களும் அவர்­க­ளது நண்­பர்­க­ளான இரண்டு முஸ்லிம் மாண­வர்­களும் பயணம் செய்த வாக­னத்­தோடு கடத்­தப்­பட்­டனர். கடற்­ப­டையி­னரால் கடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் ஐந்து மாண­வர்­களின் ஆட்­கொ­ ணர்வு மனு நேற்று கொழும்பு பிர­தான நீதிவான் கியான் பிலப்­பிட்­டிய முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக்கொள்­ளப்­பட்­ட ­வே­ளையில் மனு­தா­ரர்­களின் சார்பில் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கையில்; கடற்­ப­டை­யி­னரால்
தெகி­வ­ளையில் கடத்­தப்­பட்ட ஜந்து.மாண­வர்­களில் நான்கு மாண­வர்கள் கொலை செய்­யப்­பட்டு அவர்­க­ளது உடல்கள் களனி ஆற்றில் வீசப்­பட்­ட­தா­கவும் மற்­றைய மாண­வ­ணான ரஜீவ் நாக­நாதன் திரு­கோ­ண­ம­லைக்கு கடத்திச் செல்­லப்­பட்டு 2009ஆம் ஆண்டு சித்­திரை மாதம் 24ஆம் திகதி கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும் 22. 02.2015ஆம் திகதி வெ ளியான திவ­யின ஞாயிறு பத்­தி­ரி­கையில் செய்தி பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது எனவே
கடத்­தப்­பட்டு காணாமல் போயுள்ள மாண­வர்­கள்-­கோத்தா முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்­களா? அல்­லது பத்­தி­ரிகைச் செய்­தி­யின்­படி கொல்­லப்­பட்டு விட்­டார்­களா என நீதி­மன்றின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்துள்ளார்
இத­னை­ய­டுத்து கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி கியான் பில­பி­டிய காணாமல் போயுள்ள மாண­வர்­களின் பெற்­றோ­ரிடம் குற்றப் புல­னாய்வுப் பிரி­விற்கு சென்று பத்­தி­ரிகைச் செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யத்தை பற்­றிய முறை­பாட்டை உட­ன­டி­யாக செய்­யும்­படி அறி­வு­றித்­தி­ய­துடன், மனு­தா­ரர்­களின் முறைப்­பாட்டை உடனே பதிவு செய்து் கோட்டை நீதி­மன்றில் அறிக்கை சமர்ப்­பித்து இந்த விட­யங்­களை புலன் விசா­ரணை செய்­யும்­படி் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு பொறுப்­ப­தி­கா­ரிக்கு அறி­வு­றுத்­திள்ளார்
கோத்தா முகாம் உண்டா, அப்­ப­டி­யி­ருந்தால் எங்கு அந்த முகாம் உள்ளது- கடத்தப்பட்ட மாணவர்கள் கோதா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா? -என்பது தொடர்பான அறிக்கையை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி கட்டளையிட்டு மேலதிக விசாரணையை மார்ச் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைதுள்ளார்.

Related

பொது பல சேனா மகிந்தவை தோற்கடித்த புழுக்கள்!– டிலான் பெரேரா

சுற்றியிருந்த புழுக்களினால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ற பாரிய மரம் விழுந்து விட்டதாக அமைச்சர டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து ...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து 05 மில்லின் ரூபா பெறுமதிக்கும்...

டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது

பங்களதேஷ் டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.காலை 7.30 இற்கு பயணிக்கவிருந்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item