ஐ.ம.சு. முன்னணியின் இறுதி வேட்பாளர் பட்டியலை ஆராயும் ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து இந்த கட்சிகளின் இறுதி வேட்புமனு குழு ஜனாத...


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து இந்த கட்சிகளின் இறுதி வேட்புமனு குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாட உள்ளது.
இதனடிப்படையில் இன்று இரவு இந்த கலந்துரையாடல் நடைபெறும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி வேட்புமனு குழுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 6 பேர் அங்கம் வகிக்கி்ன்றனர்.
அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன. எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த அமரவீர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இறுதி வேட்புமனு குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இன்று இரவு நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் வேட்பாளர் பட்டியல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதனிடையே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மாலை கூடி பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
சகல மாவட்டங்களிலும் வழங்கப்பட உள்ள வேட்பாளர் பட்டியல் குறித்து இதன் போது மீளாய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்ட எவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குவதில்லை என்ற இணக்கப்பாட்டுக்கு சகலரும் வந்துள்ளதாக தெரியவருகிறது.

Related

மட்டக்களப்பில் ஆற்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு வாழைச்சேனை புனானி பகுதியில் ஆற்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.நீதவான் விசாரணைகளுக்காக சடலம் அதே இடத்தில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சுமார் 40 முதல் 45 வயதிற்க...

புங்குடுதீவு மாணவி கொலைச்சம்பவ சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

யாழ் புங்குடுதீவில் பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களான 9 பேரும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.ஊர்காவற்று...

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளேன்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தகுதியானதா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில் இன்று கலந்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item