அவுஸ்திரேலியாவுடன் மஹிந்தவின் மர்ம உறவு! அம்பலப்படுத்தும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட்டுடன் பேணிய நெருங்கிய தொடர்புகள் மர்மமானவை என பிரதமர் ரணில் விக்கிரமச...

news_24-02-2015_68mahinda
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட்டுடன் பேணிய நெருங்கிய தொடர்புகள் மர்மமானவை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 முன்னைய ஆட்சியின் போது பாதுகாப்புத் தரப்பினரின் விசேடமாக கடற்படையினரின் ஒத்துழைப்புடன் ஆட்கடத்தல்கள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கள் செல்வதைத் தடுப்பதற்கு அவுஸ்திரேலிய ரோனி அபொட் அரசாங்கம், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு இதுவே பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 ”த அவுஸ்திரேலியன்” ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் போது இந்த கருத்தினை ரணில் வெளியிட்டுள்ளார்.
 கடந்த ஆட்சிக் காலத்தில் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்பட்டத்தைக் கண்டு அவுஸ்திரேலியா மௌனம் காத்து வந்தது. இது குறித்து சிறிலங்கா மக்களுக்கு அவுஸ்திரேலியா மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
 அவுஸ்திரேலியா மட்டுமன்றி உலகின் ஏராளமான நாடுகள் சிறிலங்காவில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை தொடர்பாக மௌனம் காத்து வந்ததாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
 அவுஸ்திரேலியாவின் முன்னாள் அமைச்சர் ஸ்கொட் மொரிசன் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதை அவர் நிராகரித்ததாகவும், இதன்போது அவர் இராஜதந்திர நடைமுறையைப் பின்பற்றத் தவறிவிட்டார்.
 இதனால் அமைச்சர் கொட் மொரிசன் மீது மக்களுக்கு இருந்த கௌரவமான மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.
 எவ்வாறாயினும், இதற்காக தாம் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான எண்ணங்களைக் கொண்டிருக்கவில்லை. கடந்த கால நிகழ்வுகளின் மூலம் அவுஸ்திரேலியா படிப்பினையைப் பெற்றுக்கொண்டிருக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

பெரும் ஆபத்தில் நடுவானில் திசைதிருப்பப்பட்டுள்ள பிரெஞ்சு விமானம்

AF 267 விமானத்தில் 290 பயணிகளும் 18 விமானப் பணியாளர்களும் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளார்கள். போயிங் 777-300 ரக எயார்பிரான்ஸ் விமானம் தென்கொரியாவின் சியோல் நகரிலிருந்து பிரான்ஸ் நோக்கிப் புறப்ப...

டென்மார்க்கில் தீவரவாதத் தாக்குதல்-இருவர் கொலை

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் கருத்துரிமை குறித்த விவாதம் ஒன்று நடத்தப்பட்டுக்கொண்டிருந்த உணவகம் ஒன்றிலும், பின்னர் யூதர்களின் வழிபாட்டிடம் ஒன்றிலும் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் இருவர் கொல்...

இன்று ஹுஸ்டன் நகரில் முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்று பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது(video)

மீண்டும் அமெரிக்காவில் இன்னொரு விரோத செயல். இன்று காலை ஐந்து மணி அளவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் முஸ்லீம் பள்ளிவாசல் மற்றும் கல்வி கூடம் ஒன்று இன விரோதிகளால் எரிபொருள் ஊற்றி தீயிட்டு க...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item