இறுதி நேரத்தில் கொழும்பில் இராணுவத்தை குவித்து ஆட்சியில் நிலைக்க முயற்சி எடுக்கப்பட்டது : ராஜித

ஜனாதிபதி தேர்தல்  முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கையில் கொழும்பு நகரெங்கும் இராணுவத்தைக் குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இராணுவ தளபதி த...

NEW GOV






ஜனாதிபதி தேர்தல்  முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கையில் கொழும்பு நகரெங்கும் இராணுவத்தைக் குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இராணுவ தளபதி தயா ரத்நாயக்கவினால் நிராகரிக்கப்பட்டதால் இறுதிக் கட்டத்தில் தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதுரலியே ரத்தன தேரர் மற்றும் இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரியவுடன் இணைந்து இன்று நடாத்திய ஊடகவியலார் சந்திப்பின் போதே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

NEW GOVஅங்கு மேலும் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர்: முன்னாள் ஜனாதிபதி இறுதி நேரத்தில் கொழும்பில் இராணுவத்தைக் குவித்து, அவசர கால சட்டத்தையும் அமுல் படுத்தி ஆட்சியில் நிலைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி அரச அதிகாரிகளின் விவேகமான, தைரியமான செயற்பாட்டினாலேயே முறியடிக்கப்பட்டதாகவும் கொழும்பு நகரெங்கும் இராணுவத்தைக் குவிக்க மேற்கொள்ளப்பட்ட கட்டளையை இராணுவத் தளபதி நிராகரித்ததனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் இணையத்தளங்கள் முடக்கப்பட மாட்டது எனவும், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர் வடமாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.



Related

கோத்தபாய கையெழுத்திட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு!

எவன் கார்ட் ஆயுதக் கப்பல் சம்பவத்துடன் தொடர்புடைய சகல ஆவணங்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு காலி பிரதான மஜிஸ் ட்ரேட் நிலுபுலி லங்காபுத்ரா நேற்று உத்தரவிட்டார். முன்னாள் பாதுகாப...

இப்போது தான் மகிந்தவுக்கு தெரிந்தது

. ஆட்களைக் கைதுசெய்யும் போது பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரண க...

தமிழில் தேசிய கீதத்தை ‘அப்போதே’ வலியுறுத்தினேன்: மஹிந்த

இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி மைத்ரி பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் அதுவே தனது எண்ணமாகவும் இருந்ததாகவும் தான் ‘அப்போதிருந்தே’ அதை வ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item