இறுதி நேரத்தில் கொழும்பில் இராணுவத்தை குவித்து ஆட்சியில் நிலைக்க முயற்சி எடுக்கப்பட்டது : ராஜித

ஜனாதிபதி தேர்தல்  முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கையில் கொழும்பு நகரெங்கும் இராணுவத்தைக் குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இராணுவ தளபதி த...

NEW GOV






ஜனாதிபதி தேர்தல்  முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கையில் கொழும்பு நகரெங்கும் இராணுவத்தைக் குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இராணுவ தளபதி தயா ரத்நாயக்கவினால் நிராகரிக்கப்பட்டதால் இறுதிக் கட்டத்தில் தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதுரலியே ரத்தன தேரர் மற்றும் இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரியவுடன் இணைந்து இன்று நடாத்திய ஊடகவியலார் சந்திப்பின் போதே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

NEW GOVஅங்கு மேலும் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர்: முன்னாள் ஜனாதிபதி இறுதி நேரத்தில் கொழும்பில் இராணுவத்தைக் குவித்து, அவசர கால சட்டத்தையும் அமுல் படுத்தி ஆட்சியில் நிலைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி அரச அதிகாரிகளின் விவேகமான, தைரியமான செயற்பாட்டினாலேயே முறியடிக்கப்பட்டதாகவும் கொழும்பு நகரெங்கும் இராணுவத்தைக் குவிக்க மேற்கொள்ளப்பட்ட கட்டளையை இராணுவத் தளபதி நிராகரித்ததனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் இணையத்தளங்கள் முடக்கப்பட மாட்டது எனவும், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர் வடமாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.



Related

இலங்கை 7708771401356380765

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item