சௌதி மன்னர் அப்துல்லா காலமானார்: - அவரது சித்தப்பா மகன் சல்மான் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துலஸில் தனது 90வது வயதில் காலமானார். கடந்த பல வாரங்களாக நியுமோனியாக் காய்ச்சல் காரணமாக அவர் மருத்த...

சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துலஸில் தனது 90வது வயதில் காலமானார். கடந்த பல வாரங்களாக நியுமோனியாக் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று பிற்பகல் பிரார்த்தனைகள்க்குப் பின் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மன்னர் அப்துல்லாவின் மறைவுக்குப் பின்னர் அவரது சித்தப்பா மகன் சல்மான் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயது 79.

மறைந்த மன்னர் அப்துல்லா 2005ல் மன்னரானார். ஆனால் அவர் அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே சௌதி அரேபியாவின் நடைமுறை ரீதியிலான தலைவராக இருந்தார். ஏனெனின் அவருக்கு முன் மன்னராக இருந்தவர் ஸ்ட்ரோக்கினால் செயலழிந்திருந்தார். நாட்டின் மதப் போலிசாரைக்கட்டுக்குள் வைத்திருந்தது, மற்றும் சௌதி அரேபியாவில் நடைமுறையில் இருக்கும் சொற்ப அளவிலான தேர்தல்களில் பெண்களுக்கு வாக்குரிமை தந்தது போன்ற சீர்திருத்தங்களை மன்னர் அப்துல்லா செய்தார் என்று கருதப்படுகிறது.

சௌதி மன்னர் அப்துல்லாவின் மறைவையொட்டி, சௌதி மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செலுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (மூத்தவர்) மன்னர் அப்துல்லாவை தனது "அன்புள்ள நண்பர்" என்று வர்ணித்து, சதாம் ஹுசேன் 1990ல் குவைத்தின் மீது படையெடுத்தற்கு எதிர்ப்பு திரட்ட அவர் ஆற்றிய பங்கை தான் மறக்க இயலாது என்றார்.

மன்னர் அப்துல்லா சௌதி அரேபியாவுக்குச் செய்த சேவைகள் , அமைதிக்கு அவர் காட்டிய உறுதிப்பாடு மற்றும் மதங்களுக்கிடையே புரிந்துணர்வை பலப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக நினைவு கூரப்படுவார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறினார்.

Related

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டை இதுவரை எந்த வரலாற்றில் இடம்பெறவில்லை;விமல்

தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டை இதுவரை எந்த வரலாற்றில் இடம்பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு இன்...

செப்டம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் – ஜனாதிபதி

எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் புதிய பாராளுமன்றம் தெரிவுசெய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஊடக நிறுவனங்களின் பிரமுகர்களுடன் தற்போது நடைபெற்று வருகின்ற சந்திப்பின்போதே ஜனா...

கோட்டாபய ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (20) வாக்குமூலமளித்து வருகின்றார்.லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item