ஹஜ் கோட்டா பகிர்வை நடைமுறைப்படுத்த அனுமதி

ஹஜ் கோட்டா பகிர்­வுக்கு எதி­ராக மூன்று ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யா­ளர்­களால் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த அடிப்­படை உரி­ம...


ஹஜ் கோட்டா பகிர்­வுக்கு எதி­ராக மூன்று ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யா­ளர்­களால் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த அடிப்­படை உரி­மை­மீறல் வழக்கில் உயர்­நீ­தி­மன்றம் நேற்று தீர்ப்­பினை வழங்­கி­யது.

ஹஜ் முக­வர்­களின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்த உயர் நீதி­மன்ற பிர­தம நீதி­ய­ரசர் ஸ்ரீபவன் பகி­ரப்­பட்­டுள்ள கோட்­டா­வுக்­கான அனு­ம­தியை வழங்­கினார்.

இத­ன­டிப்­ப­டையில் ஏற்­க­னவே பகி­ரப்­பட்ட முக­வர்­களின் கோட்டா விப­ரப்­பட்­டியல் நேற்றே உட­ன­டி­யாக சவுதி ஹஜ் அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

ஹஜ் கோட்டா உயர் நீதி­மன்ற ஹஜ் வழி­காட்­டல்­க­ளின்­படி பகி­ரப்­ப­ட­வில்­லை­யெ­னவும் இது தமது அடிப்­படை உரி­மை­மீறல் எனவும் காரா, சப்ரா, ட்ரான்ஸ் வர்ல்ட் ஆகிய மூன்று முகவர் நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்கள் இவ்­வ­ழக்­கினைத் தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

முதலாம் முறை­யாக கோட்டா ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் பகி­ரப்­பட்­ட­போது உயர் நீதி­மன்ற ஹஜ் வழி­காட்­டல்­களை மீறி கோட்டா பகி­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனைத் தடை­செய்து மீள பகிர உத்­த­ர­வி­டும்­ப­டியும் உயர்­நீ­தி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து ஹஜ் குழு ஹஜ் வழி­காட்­டல்­க­ளின்­படி நேர்­மு­கப்­ப­ரீட்­சையை நடத்தி கோட்­டாவை மீள பகிர ஏற்­பாடு செய்­வ­தாக உயர் நீதி­மன்றில் மனு­வொன்­றினை சமர்ப்­பித்­தது. அதற்கு நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யது.

ஹஜ் குழு இரண்டாம் முறை­யாக நேர்­மு­கப்­ப­ரீட்சை நடத்தி கோட்­டாவை மீளப் பகி­ர்ந்­தது. அந்­தப்­ப­கிர்வும் தமது அடிப்­படை உரி­கைளை மீறி பகி­ரப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட மூன்று முகவர் நிலைய உரி­மை­யா­ளர்கள் மனு­வொன்­றினை நீதி­மன்றில் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். இம்­ம­னு­வினை விசா­ரித்த நீதி­மன்றம் நேற்று குறிப்­பிட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளது.

வாதிகளான மூன்று ஹஜ் முகவர்கள் சார்பில் சட்டத்தரணி மனோகர டி சில்வாவும், முஸ்லிம் சமய மற்றும் தபால் அமைச்சின் சார்பில் சட்டத்தரணி ஞான ராஜும் ஆஜராகியிருந்தனர்.

Related

வசீம் தாஜூதீனின் சடலம் சிதைவடையவில்லை! சட்ட வைத்திய அதிகாரி தகவல் - செஞ்சிலுவைச் சங்கத்திடமும் விசாரணை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.பொலிஸ் பாதுகாப்புக்கு மத்...

பிரான்ஸ் வீரரை தாக்கிய மெஸ்சியால் சர்ச்சை!

 பார்சிலோனா அணியின் முன்னணி நட்சத்திர வீரராக திகழ்பவர் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த லயோனல் மெஸ்சி. அந்த அணியின் கேப்டனாக இருக்கும் மெஸ்சி சாதுவான குணம் படைத்தவர். பந்தை ஆக்ரோஷமாக கடத்திச் செல்...

மஹிந்த ஆட்சிக்கு வந்தால் ஆபத்து! சந்திரிக்கா எச்சரிக்கை

மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ​தெரிவித்தார். மஹிந்த நாட்டை சீரழித்ததன் பின்னர், ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item