நேற்று சுபநேரத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டாராம் மகிந்த? பசில் தகவல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஜனாத...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சுபநேரத்தில் வேட்புமனுவில் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்டதாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்திற்கு வேட்புமனுவில் கையெழுத்திடவே நேற்று மகிந்த விஜயம் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும், அதற்கு மறுப்புத் தெரிவித்து, இன்றே கையெழுத்திடவுள்ளதாக சிங்கள ஊடகமொன்றிற்கு மகிந்த குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் இன்றே அதிகாரபூர்வமாக வேட்புமனுக்களில் கையெழுத்திடவுள்ளனர்.

நேற்றைய தினமே வேட்புமனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை ஆரம்பிக்கவிருந்த போதிலும், வேட்பாளர் பட்டியல் இறுதிப்படுத்தப்படுவதில் ஏற்பட்ட இழுபறியால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்றும் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக நிலவிய இழுபறி நிலையால், மகிந்த ராஜபக்ச தரப்பின் செய்தியாளர் மாநாடுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.
இன்று நாரஹேன்பிட்டிய அபேராம விகாரையில் நடக்கவுள்ள செய்தியாளர் சந்திப்பில், மகிந்த அணியின் முக்கிய தலைவர்களான தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் நிலை குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

நாட்டிற்குத் திரும்ப வேண்டாம் என பசிலுக்கு அறிவுறுத்தினேன் : மஹிந்த ராஜபக்ஸ(video)

பசில் ராஜபக்ஸ நாட்டிற்குத் திரும்பி வராமல் இருப்பதே சிறந்தது என தாம் அறிவுறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தற்போதைய பணிப்பாள...

ஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு விஹார மகாதேவி பூங்கா...

ராஜபக்ச அரசின் மூன்று முக்கியஸ்தர்கள் அடுத்த சில தினங்களில் கைது செய்யப்பட உள்ளனர்

ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த மூன்று முக்கிய நபர்கள் அடுத்த சில தினங்களில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் சம்பந...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item