“ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தல்” | இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு

ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தமானது, இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தலாகும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கருத்து ...

“ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தல்” | இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு
ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தமானது, இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தலாகும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கருத்து தெரிவித்தார்.

வல்லரசு நாடுகள், ஈரானுடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கடும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு அந்த நாடு அணு ஆராய்ச்சி மேற்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான இறுதி ஒப்பந்தம் கடந்த வாரம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஈரான் அணு ஆராய்ச்சி ஒப்பந்தமானது, இஸ்ரேல் தேசத்துக்கே அச்சுறுத்தல் தருவதாக அமையும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு தெரிவித்தார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு பதிலாக, அந்த ஒப்பந்தமானது அணு ஆயுதம் தயாரிக்க உதவும் விதமாக அமையப் போகிறது. அணு ஆயுதப் போட்டி அதிகரிப்பதுடன், கொடூரமான போர் வெடிக்கும் ஆபத்தும் உள்ளது என்று நெதன்யாஹு கூறினார்.

அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை எனவும், ஹிஸ்புல்லா, பாலஸ்தீன தீவிரவாதக் குழுக்களுக்கு ஈரானின் ஆதரவு தொடரும் எனவும் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமை கருத்து தெரிவித்ததற்கும் நெதன்யாஹு கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஈரான் மீது தாக்குதல் தொடுப்பதற்கு 40 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக, கடந்த வாரம் இஸ்ரேலில் வெளியான ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Related

சிறை தகர்ப்பு, தீவிரவாதிகள் தப்பிஓட உதவிசெய்த 7 பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் கைது

பாகிஸ்தானில் சிறையை தகர்த்து தீவிரவாதிகள் தப்பிஓடுவதற்கு உதவிசெய்த 7 பாதுகாவலர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.  கில்கிட்-பால்திஸ்தான் பகுதியில் 7 பாதுகாவலர்கள் மற்றும் மத தலைவர்கள...

பிறந்து 3 நாளில் கடத்தப்பட்ட பெண் 17 வருடத்துக்குப் பின் பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்

தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த தம்பதி செலஸ்ட்–மோர்னே நர்ஸ். இவர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 1997 ஏப்ரலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஷெபானி என ...

ரஷ்யா: மாஸ்கோவில் கூடும் நேம்ஸோவ் அஞ்சலி பேரணி

ரஷ்யாவில் சுட்டுக்கொல்லப்பட்ட எதிரணி செயற்பாட்டாளர் போரிஸ் நேம்ஸோவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் பேரணியில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளனர். போரிஸ் நேம்ஸோவ் அடையாளம் தெரி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item