வேட்புமனுத் தாக்கலின் பின்னர் பேரணிகளை நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பேரணிகளை நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்...

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் பேரணிகளை நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பேரணிகளை நடத்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பேரணிகளை நடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தல் நிறைவு பெற்று ஒருவாரம் கடக்கும் வரை அரசியல் பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக நல மற்றும் மத ஊர்வலங்களை மாத்திரமே இந்தக் காலப் பகுதியில் நடத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் நேற்று (13) வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மத்திய , வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் வாகனப் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய இந்த பேரணிகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மாஅதிபர் குறித்த மூன்று மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களுக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.

வழக்குத் தாக்கல் செய்வதற்காக குறித்த விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை சட்டமாஅதிபரிடம் கையளிக்கப்படவுள்ளன.

Related

தென் சூடானில் இலங்கை விமானப் படையினர்

தென் சூடானில் ஐ.நா அமைதிக்கும் படைக்கு உதவுவதற்காக 104 விமானப் படையினர் கொண்ட அணி மூன்று ஐ.17 உலங்கு வானூர்திகளுடன் அங்கு கடமையில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. உலங்கு வானூர...

உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்!– பிரதமர்

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...

100 நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டு வந்தாலும் அரசு அஞ்சாது: நீதியமைச்சர்

அரசாங்கத்தை விரைவில் கலைத்து தமக்கு விருப்பமான நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் உட்பட முழு நாடும் தற்போதை...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item