இலங்கை – பாக். கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் ரசிகர்களிடையே கைகலப்பு : பெரும் பதற்றம்

இலங்கை -– பாகிஸ்தான் கிரிக்கெட் போட்­டி­யின்­போது மைதா­னத்தில் நேற்றிரவு ரசிகர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட கைக­லப்­பினால் கொழும்பு ஆர்.பிரே­ம...

இலங்கை -– பாகிஸ்தான் கிரிக்கெட் போட்­டி­யின்­போது மைதா­னத்தில் நேற்றிரவு ரசிகர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட கைக­லப்­பினால் கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ கிரிக்கெட் மைதா­னத்தில் பெரும் பதற்றம் ஏற்­பட்­டது.


இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையில் நேற்று நடை­பெற்ற ஒருநாள் போட்­டியின் நடுவில் ரசி­கர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் கைகலப்­பாக மாறி­ய­தை­ய­டுத்து அங்கு பெரும் பதற்றம் நில­வி­யது. இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் நிலைமையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர். அதன் பின்னர் கைக­லப்பில் ஈடு­பட்­ட­வர்­களை மைதா­னத்தை விட்­டு­வெளி­யேற்­றி­யுள்­ளனர்.


அதன்­பி­றகு ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தின் 'பி' பிரிவு பகு­தி­யி­லி­ருந்து மைதா­னத்­திற்குள் கற்கள் வீச­யப்­பட்­ட­தா­கவும்இ அதில் கல் ஒன்று மைதா­னத்தில் களத்­த­டுப்பில் ஈடு­பட்­டி­ருந்த வீர­ருக்கு அருகில் வந்­து­வி­ழுந்­ததால் போட்டி இடை­நி­றுத்­தப்­பட்­டது.



இந்தச் சம்­பவம் குறித்து பொலிஸ் ஊட­கப்­பேச்­சா­ள­ருடன் தொடர்­கொண்டு கேட்­ட­போது, நேற்று இரவு 8.30 மணி­ய­ளவில் இந்தச் சம்­பவம் நடந்­த­தா­கவும்இ இந்த அசா­தா­ரண நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­து­விட்­ட­தா­கவும்இ வீரர்­களின் பாது­காப்பு கருதி மைதானம் விசேட அதி­ர­டிப்­ப­டையினரின் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வரப்பட்டதா­கவும் அவர் தெரி­வித்தார்.

மேலும் இது­கு­றித்து விசா­ரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாவும்இ அந்தக் குழுவின் அறிக்கை வந்தபின்னரே மேலதிகத் தகவல்கள் தெரியவரும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.




Tags:

Related

மத்திய மாகாண சபையில் ஆட்சிமாற்றம் !

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் சகோதரர் திலின தென்னகோன் அவர்களுடன் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பக்கம் இணையவுள்ள நிலையில் நாளை மத்திய மாக...

அரச ஊழியர்களுக்கு அதிகரித்த சம்பளம் அடுத்த மாதம்முதல்

மாற்றத்தை நோக்கிய மைத்ரியின் ஆட்சியில்,100 நாட்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத் திட்டங்களில், அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்கி, அதன் முதல்படியாக உடன் நடைமுறைக்கு வரு...

முதலமைச்சராக ஹரின் நியமனம்

ஊவா மாகாண முதலமைச்சராக ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த மாகாண சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மைய இழந்ததையடுத்தே, பெரும்பான்மையை நிர...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item