பொதுத் தேர்தலில் இம்முறை சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டி

பொதுத் தேர்தலில் இம்முறை சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டியிடுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைய...


பொதுத் தேர்தலில் இம்முறை சுமார் 150 பௌத்த பிக்குகள் போட்டியிடுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் அதிகளவான பௌத்த பிக்குகள் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

பௌத்த பிக்குமார் தேர்தலில் போட்டியிடுவதால், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவிருந்த சுமார் 150 பௌத்த விகாரைகள் அதில் இருந்த நீக்கப்பட்டுள்ளதாகவும் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுபல சேனா அமைப்பின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுன போட்டியிடுகிறது.

இதில் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அதிகளவிலான பிக்குமார் போட்டியிடுகின்றனர்.

Related

தலைப்பு செய்தி 504899903662831600

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item