தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்?
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய தேர்தல் முறைமைக்கான 20ம் திருத்...


தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய தேர்தல் முறைமைக்கான 20ம் திருத்தச்சட்ட உத்தேச பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காது, அதற்கு பதிலாக புதிய தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தற்போது வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள குறைந்த பட்சம் ஐந்து வாரங்கள் தேவைப்படும்.
எனவே, சட்ட மூலம் ஒன்றாக நாடாளுமன்றில் இதனை சமர்ப்பிக்காது உத்தேச யோசனைத் திட்டமாக நாடாளுமன்றில் தேர்தல் முறைமை மாற்றம் குறித்து விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
20ம் திருத்தச் சட்டத்திற்கு அரசாங்கத்தைப் போன்றே எதிர்க்கட்சிகளின் சில கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான சமூக நீதிக்கான அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் 20ம் திருத்தச் சட்ட யோசனையை ஒத்தி வைக்குமாறு கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் தேர்தல் முறைமை மாற்றம் குறித்து விவாதம் நடாத்த தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இன்று சபாநாயகர் சமால் ராஜபக்ச தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
நாளை அவை ஒத்திவைப்பு அமர்வின் போது தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிடவுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.