சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துக

சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துக : ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர இன்று (11) ஊ...

z_p06-I-did1_0சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துக : ஹிருணிக்கா பிரேமச்சந்திர

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர இன்று (11) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை எற்பாடு செய்து சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது;

துமிந்த சில்வாவின் போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் எனது தந்தை வெளிப்படுத்தியமையே அவரின் கொலைக்குக் காரணமாக அமைந்தது. இவ்வாறு இருக்கும் போதும் ஏன் இந்த நபரை கைது செய்வதில்லை என்பது தான் எனது கேள்வி. போலி ஆவணம் தொடர்பில் அண்மையில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டார். போலி ஆவண குற்றச்சாட்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் அதற்கு துணைபோதல் என்பன பாரிய குற்றச்சாட்டாகும். எவரேனும் இதில் கைது செய்யப்பட்டால் பிணை வழங்கப்பட மாட்டாது. இது வேடிக்கையாக இருக்கின்றது. இது மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது.என்றார்.

அத்துடன், குற்றங்கள் நிறுத்தப்படும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் தமக்கு வாக்களித்திருப்பதாகவும் ஊழல் மிகுந்த அரசாங்கத்தில் குற்றமிழைத்தவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள், நல்லாட்சியிலும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என மக்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தனது தந்தையின் கொலை தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் சாட்சிகளை முன்நிறுத்த ​வேண்டும் என வலியுறுத்திய ஹிருணிக்கா பிரேமச்சந்திர, குற்றமிழைத்தால் எவராக இருந்தாலும் அது குற்றம் தான் எனவும் சுட்டிக்காட்டினார்.




Related

ஞானசார தேரர் இன்று முக்கிய வழக்குக்கு வரவில்லை.

புனித அல்குர்ஆன் அவமதிப்பு மற்றும் நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற வட்டரக்க விஜத தேரரின் ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் ஞானசார தேரர் உள்ளிட்ட பொதுபலசேன அமைப்பின் மு...

சேருவில பிரதேச செயலகத்தில் அபாயாவுக்குத் தடை? சாரி உடுக்க உத்தரவு

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் முஸ்லிம் பெண்கள் அபாயாவுக்குப் பதிலாக கட்டாயம் சாரி உடுத்து வர வேண்டும் என பிரதேச செயலாளரினால் பணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்...

பௌத்த பிக்குகளுக்கு இறைச்சி சாப்பிட ஆசை இருந்தால் இரகசியமாக சாப்பிடுங்கள் -அஸ்கிரிய மாநா யக்கர்

மிருகங்களைக் கொன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்களை பௌத்த பிக்குகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுவதாக அஸ்கிரிய மாநாயக்கர் ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.  பன்னிபிட்டிய விகாரையில் இடம்பெற்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item