பதவியில் இருக்கும்போதே பதவியை இழந்த ஒரு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே :பொன்.செல்வராசா

எமது நாட்டில் பத­வியில் இருக்கும் போதே பதவி இழந்த ஒரு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே. இன்னும் இரு ஆண்­டுகள் பதவிக் காலம் இருக்­கையில் ஆயுள் ...

பதவியில் இருக்கும்போதே பதவியை இழந்த ஒரு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே : பொன்.செல்வராசா

எமது நாட்டில் பத­வியில் இருக்கும் போதே பதவி இழந்த ஒரு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவே. இன்னும் இரு ஆண்­டுகள் பதவிக் காலம் இருக்­கையில் ஆயுள் பூரா­கவும் தானே ஜனா­தி­ப­தி­யாக இருக்க வேண்டும் என்ற பேரா­சை­யுடன் களம் இறங்­ கிய மஹிந்த ராஜபக் ஷ, கையில் இருந்த பத­வி­யையும் கைந­ழுவ விட்ட பரி­தாப நிலைக்கு ஆளா­கி­யுள்ளார். இந்த மன­நி­லையை அவ­ருக்கு கட­வுள்தான் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். ஏனெனில் இன்னும் இரண்டு வரு­டங்கள் இந்த கொடுங்கோல் ஆட்சி நீடித்­தி­ருந்தால் மக்கள் தாங்க மாட்­டார்கள் என்று கட­வுளே தீர்மா­னித்­துத்தான் இத்­த­கைய ஒரு மன­மாற்­றத்தை பேரா­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும் என மட்டு.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன்.செல்­வ­ராசா தெரி­வித்தார்.

குறு­மண்­வெளி சக்தி சிக்­கன கட­னு­தவு கூட்­டு­றவுச் சங்­கத்தின் 26 ஆவது ஆண்டு பரி­ச­ளிப்பு விழா அண்­மையில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

வாக்­கா­ளர்­களும் கட்சி பேதங்­க­ளுக்­கப்பால் நாடு தழு­விய ரீதியில் சிங்­கள, தமிழ், முஸ்லிம். மலை­யக மக்கள் இம்­முறை ஒன்­றி­ணைந்து ஏகா­தி­பத்­திய மற்றும் கொடுங்கோல் ஆட்­சிக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்து வாக்­குப்போர் நடத்தி தங்கள் வல்­ல­மையை நிரூ­பித்­துள்­ளனர். இதை உண்­மை ­யி­லேயே கட­வுளும் மக்­களும் இணைந்து எடுத்த தர்­மத்தை நிலை­பெறச் செய்­வ­தற்­கான தீர்­மா­ன­மா­கவே நாம் கருத வேண்டும்.

இல்­லா­விட்டால் இத்­த­கை­ய­தொரு அமைதி வாக்குப் புரட்சி ஏற்­பட்­டி­ருக்க முடி­யாது. கடைசி நேரம் வரை தனது வழக்­க­மான பாணியில் பத­வியை தக்­க­வைக்க எடுத்த பிர­யத்­த­னங்கள் அனைத்தும் பிசு­பி­சுத்துப் போன நிலையில் வெளி­நாட்டு அர­சு­களின் அழுத்­தங்­க­ளுக்கு மத்­தி­யிலே அவர் அலரி மாளி­கையில் இருந்து வெளி­யே­றினார். வெளி­யேறும் போது மக்கள் தீர்ப்­பிற்கு தலை வணங்கி புதிய ஜனா­தி­ப­திக்கு வழி விட்டுச் செல்­வ­தாக கூறினார். ஆனால் பதவி வில­கிய பின்­னரும் அவ­ரி­ட­மி­ருந்து இனத்­துவேஷம் அற்றுப் போக­வில்லை என்­பதை அவர் தனது இல்­லத்தில் தனது கிராம மக்­க­ளுக்கு ஆற்­றிய உரை மூலம் வெளிப்­பட்­டுள்­ளது.

சிறு­பான்மை மக்­களே தனது தோல்­விக்கு காரணம் என்­று­ அப்­ப­குதி மக்­க­ளிடம் தெரி­வித்­துள்ளார். இக் கருத்­தா­னது இனத்­து­வே­ஷத்தை தூண்டி நாட்டில் மீண்டும் ஒரு கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கி­லேயே கூறப்­பட்­டி­ருக்க வேண்டும். எனினும் சிங்­கள மக்கள் பக்­கு­வ­மான நிலையில் உணர்ச்­சி­வ­சப்­ப­டாமல் அமைதி காத்­தி­ருக்­கின்­றார்கள். அத்­துடன் புதிய அரசின் சட்ட திட்­டங்­களைப் பேணும் நட­வ­டிக்­கையால் எவ்­வித அசம்­பா­வி­தங்­களும் ஏற்­ப­டாமல் பாது­காக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதிலும் அவர் தோல்­வி­யையே கண்­டுள்ளார். தேர்­தலின் பின்னர் அவர் தொடர்ந்து தோல்­வி­களைத் தழு­விய வண்­ணம் உள்ளனர்.

அவர் எதிர்­பார்த்த கட்சித் தலைவர் பத­வியும் கைவிட்டுப் போயுள்­ளது. அதற்கு அவர் கட்சி இரண்­டாக உடை­வதைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே பத­வியை விட்டுக் கொடுத்­த­தாக கூறியுள்ளார். எத்­த­னையோ கட்­சி­களை கூறு, கூறாக உடைத்து தனது பத­வியை தக்க வைத்துக் கொண்­ட­வ­ருக்கு இப்­போதுதான் ஞானம் பிறந்­தி­ருக்­கின்­றது. தனது கட்­சிக்கு வரும்­போ­துதான் அதன் தாக்கம் அவ­ருக்குப் புரிந்­தி­ருக்­கின்­றது.

யுத்த வெற்­றியின் போது கைப்­பற்­றிய தள­பா­டங்­க­ளையும் கரு­வி­க­ளையும். போரா­ளி­களின் வதி­வி­டங்­க­ளையும் பார்ப்­ப­தற்கு சிங்­கள மக்­க­ளுக்கு இல­வச போக்­கு­வ­ரத்து மற்றும் வச­தி­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுப்­பதில் அள­விலா ஆனந்தம் கொண்­டவர். ஆனால் இன்று அவர் வாழ்ந்த ஆடம்­பர அலரி மாளிகை மக்­களின் ஆசி­யாவின் அதி­சய­மிக்க காட்சி கூட­மாக மாறி­யி­ருக்­கின்­றது. இதுதான் கால மாற்றம். இது இன­வாத அர­சி­ய­ல­வா­தி­க­ளுக்குச் சிறந்த பாட­மாக அமைய வேண்டும்.

எனவே இனியும் இன­வாத அர­சி­ய­லுக்கு இட­மில்லை என்பதை எமது மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இன்றைய அரசின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமைந்திருக்கின்றது. எமது கோரிக்கைகள் செவிமடுக்கப்படுகின்றது. செயல் வடி வம் பெற்றுக் கொண்டிருக்கின்து. நாட் டிற்கான நல்லதொரு தலைவரைப் பெற் றிருக்கின்றோம். அதனால் நாட்டில் பூரண அமைதி நிலவுகின்றது. எமது அபிலா ஷைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிகின்றது.

Related

போர்க்குற்ற விசாரணை! பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணைக்கு, மைத்திரி அரசாங்கம் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இ...

போர்க்குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் சட்டமா அதிபர்

போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரை காப்பாற்றும் முயற்சியில் சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவர்களை கைது செய்வதற்கு போதிய ஆதாரங்க...

பொதுத் தேர்தலில் களமிறங்க தயாராகும் விமுக்தி குமாரதுங்க மற்றும் சத்துரிகா சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஒரே மகனான கால்நடை மருத்துவர் விமுக்தி குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகா சிறிசேன எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item