NFGG மற்றும் SLMC கூட்டாக மட்டக்களப்பில் களமாட தீர்மானம் !!
நல்லாட்சிக்கான தேசிய முன்னனி, முஸ்லிம் காங்கிரஸ் உடன் செய்துகொண்டுள்ள தேர்தல் கூட்டணி மூலம் மட்டகளப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டி...


நல்லாட்சிக்கான தேசிய முன்னனி, முஸ்லிம் காங்கிரஸ் உடன் செய்துகொண்டுள்ள தேர்தல் கூட்டணி மூலம் மட்டகளப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிடுகிறது. முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படவுள்ள இரு வேட்பாளர் நியமனங்களில் ஒன்றினை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு வழங்கவுள்ளதாகவும் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்ற தேர்தல் 2015: பொது இலக்கிற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னனி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டகளப்பு திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களில் போட்டியிடுவதென நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தலைமைத்துவ சபை முடிவெடுத்துள்ளதாக முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள ஊடக றிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இதன் பிரகாரம் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி, முஸ்லிம் காங்கிரஸ் உடன் செய்துகொண்டுள்ள தேர்தல் கூட்டணி மூலம் மட்டகளப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் இரு வேட்பாளர்களையும் திருகோணமலை மாவட்டத்தில் யானை சின்னத்தில் ஒரு வேட்பாளரையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி களமிறக்கிறது. இந்த முடிவினை அறிவிக்கும் பத்திரிகையார் சந்திப்பொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் 10.07.2015 வெள்ளியன்று இடம்பெற்றது. இதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியும் கலந்து கொண்டது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தவிசாளர் பொறியியளாளர் அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு இத்தேர்தல் கூட்டு குறித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். ஜனவரி 08ம் திகதி இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவமிக்க மாற்றம் இன்னும் முழுமை பெறவில்லை. அத்துடன் புதிய சவால்களும் தோன்றியுள்ளன. தோற்கடிக்கப்பட்ட சக்திகளை மீண்டும் ஒருமுறை தோற்கடிக்க வேண்டியது ஒரு தேசிய கடமையாக மாறியுள்ளது. இந்த நோக்கங்களை அடைவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னனியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் ஏற்படுத்திக்கொண்டுள்ள புரிந்துணர்வு அடிப்படையிலான தேர்தல் கூட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பலமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான வியூகமாகவே இது பார்க்கப்படல் வேண்டும். தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள சவாலை எதிர்கொள்வதற்கு இதுவே சாத்தியமான முடிவாகும்.
இரு தரப்பினப்பினரதும் தனித்துவத்தையும் சுயாதீனத்தையும் பாதிக்காத வகையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அம்சங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இரு தரப்பும் உடன்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மித்த சில நாட்களில் கைச்சாத்திடப்பட்டு மக்கள் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்படும்.
பொது இலக்கிற்காக கருத்து வேறுபாடுள்ள சக்திகளுடன் இனைந்து செயலாற்றுவது நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுப்பதாக அமையாது என்பதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி தெளிவாகவுள்ளது. கடந்த காலங்களிலும் இது போன்ற பல அரசியல் கூட்டுக்களில் பங்கேற்றுள்ளதை சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
அரசியல் செயற்பாடு கற்பனா வாதமாக அல்லாமல் நடைமுறை சாத்தியமானதாக அமைய வேண்டுமென்பதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி போதிய தெளிவுடன் உள்ளது. அடிப்படை கொள்கைககை சமரசம் செய்யாமல் பொது நன்மைக்காக ஒன்றினைதல் என்ற கருத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முன்னனிக்கும் இடையிலான தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தேசத்தினதும் சமூகத்தினதும் நலனை கருத்திற்கொண்டு எடுக்கப்படடுள்ள இந்த நிலைப்பாட்டை ஆதரித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சிறந்ததொரு மாற்றத்தின் பங்காளர்களாக அனைவரும் இனைந்துகொள்ளுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னனி அழைப்பு விடுக்கின்றது.