வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும்

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கி...

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும்
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் எதிர்வரும் சில தினங்களில் வழங்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களை அகர வரிசையில் ஒழுங்குப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

அகர வரிசையில் ஒழுங்கப்படுத்தப்பட்ட வேட்புமனுக்கள் இன்று (14) முதல் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணையாளர் பரிசீலித்ததன் பின்னர் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படவுள்ளன

ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவு பெற்றது.

225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில் 21 அரசியல் கட்சிகளும் 201 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை கையளித்துள்ளன.

22 தேர்தல் மாவட்டங்களையும் சேர்ந்த 6151 வேட்பாளர்கள் இம் முறை தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 792 ஆகும்.

கம்பஹா மாவட்டத்தில் 588 வேட்பாளர்களும், குருணாகல் மாவட்டத்தில் 468 வேட்பாளர்களும் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

Related

இலங்கையர் ஒருவரின் மனுவை ஆஸி. மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது!

இலங்கைக்கு திரும்பிச் சென்றால் அங்கு சித்திரவதைகளை எதிர்நோக்க நேரிடும் எனக் கூறி இலங்கைத் தமிழர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த இலங்கை தமிழர் 2010ம் ஆண்...

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க கோவை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்றைத் தயாரிப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப...

சரத் பொன்சேகா தாக்கல் செய்த ரீட் மனு தள்ளுபடி

ஜனாதிபதி தனக்கு பொதுமன்னிப்பு வழங்கியதால், தனக்குரிய நாடாளுமன்ற ஆசனத்தை வழங்குமாறு கோரியும், நாடாளுமன்ற செயலாளருக்கு அது தொடர்பில் உத்தரவொன்றை பிறக்குமாறும் கோரியும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item