முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச !!

முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச குருணாகலில் தேர்தலில் போட்டியிடுவது குற...


முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச குருணாகலில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய ரூபவாஹினியில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நேரத்தில், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் குழுவிடம் தயாசிறி இதனை கூறியுள்ளார்.

மிகவும் வெறுப்படைந்தவராக பேசிய தயாசிறி ஜயசேகர, “ முழு நாட்டையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு, தற்போது குருணாகலையும் சாப்பிட வந்துள்ளனர். தேர்தல் முடியும் வரை மட்டுமே நாங்கள் இவர்களுடன் இருப்போம். என்ன செய்வது” என தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படியிருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச தேர்தலில் குருணாகலில் போட்டியிட தீர்மானித்ததை அடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் அணியில் உட்பிரச்சினைகள் மேலும் அதிகரித்தன.

இதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். இதனால், மேலும் அதிருப்திக்கு உள்ளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் நாவின்னவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துள்ளனர். நாவின்னவுடன் சென்றுள்ள ஆதரவாளர்கள் எண்ணியதை விட மிகப் பெரிய எண்ணிக்கை என கூறப்படுகிறது.

Related

மைத்திரியின் வீடு மஹிந்தவுக்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு விஜேராம வீதியில் அமையப் பெற்றுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்த...

நாட்டில் நாகரீகமான அரசியல் கலாசாரம் உதயமாகும் சந்தர்ப்பத்தில் இம்முறை சுதந்திர தினம்– பிரதமர்

நாகரீகமான அரசியல் கலாசாரம் உதயமாகிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். இலங்கையின் முதலாவது பிரதமர் தேசப்பிதா டி.எஸ்.ச...

சுபிட்சத்துக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொள்வோம்! - ஜனாதிபதிசுதந்திர தின செய்தி

நேர்மை மற்றும் நல்லாட்சியின் ஒளியில் சமாதானம், சுதந்திரம் மற்றும் சுபிட்சத்துக்கான ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியில் நாம் இணைந்து கொள்வோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item