இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படுகிறதா?
நாடாளுமன்றத்தை இன்றைய தினம் இரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக சில சிங்கள மொழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்...


நாடாளுமன்றத்தை இன்றைய தினம் இரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக சில சிங்கள மொழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடைமுறை அரசியல் நிலைமைக்கமைய ஜனாதிபதி இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பார்த்திருந்த தீர்மானம் இதுவாகும்.
நாடாளுமன்றத்தை கலைத்த தினத்தில் இருந்து குறைந்தது 52 நாட்கள், கூடியது 56 நாட்களினுள் எதிர்வரும் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும்.