பெளத்த சாசனத்திற்கும் ,சிங்கள இனத்தவறுக்கும் இந்த நல்லாட்சி பெரும் அச்சுறுத்தல் : ஞானசாரர்

புதிய அரசாங்கம் ஆட்சிபீடத்துக்கு வந்ததிலிருந்து நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது .பெளத்த சாசனத்திற்கும் சிங்கள இ...

புதிய அரசாங்கம் ஆட்சிபீடத்துக்கு வந்ததிலிருந்து நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது .பெளத்த சாசனத்திற்கும் சிங்கள இனத்தவறுக்கும் இந்த நல்லாட்சி ஆற்றிய விதம் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகிறது,
புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று 90 நாட்கள் ஆகி­யுள்ள நிலையில் ,நாட்டின் வளர்ச்­சிக்கும் தேசிய பாது­காப்­பிற்கும் பெரும் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. மேலும் அர­சி­ய­ல­மைப்பின் திருத்தம் தொடர்­பிலும் முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இவற்றை சமா­ளிக்க தெரி­யாத ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட­ன­டி­யாக பதவி விலகி தனது உடை­மை­களை எல்லாம் மூட்டை கட்­டி­க்கொண்டு வீடு செல்­ல­வேண்டும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கோரிக்கை விடுத்தார்.நாட்டில் தற்­போது உரு­வெ­டுத்­துள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பதோ, பிர­தமர் பதவி வில­கு­வதோ, தேசிய அர­சாங்கம் அமைப்­பதோ தீர்­வாக கரு­தப்­ப­ட­மாட்­டாது. பயங்­க­ர­வா­தத்­திற்கு இட­ம­ளி­யாது பௌத்த தர்­மத்தை பாது­காப்­பதே சிறந்த விட­ய­மாகும். புதிய அரசாங்கம் ஆட்சி பீட­மே­றிய பிற்­பாடு பௌத்த தர்­மத்­திற்கு உரிய மதிப்­பினை வழங்­க­வில்லை என்றும் அவர் குற்றம் சுமத்­தினார்.

தற்­போ­தைய நாட்டின் அர­சியல் நில­வரம் தொடர்பில் தமது கருத்­துக்­களை தெளிவுப்­ப­டுத்தும் முக­மாக நேற்று கிரு­லப்­பனை பொதுபல சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே கல­கொட அத்தே ஞான­சார தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நாட்டின் வளர்ச்­சிக்கு சமா­தா­னமும் உறு­தி­யான நிலைப்­பா­டுமே மிகவும் முக்­கி­யத்­துவம் வாயந்­த­தாக காணப்­ப­டு­கி­றது. இவற்றில் அர­சியல் நிலைப்­பாடு மிகவும் பிர­தான அம்­ச­மாக கரு­தப்­ப­டு­கி­றது. சுமார் 70 வரு­டங்­க­ளாக இலங்­கையை ஆட்சி செய்த தலை­வர்­க­ளினால் நாட்டை வளர்ச்­சிக்கு உட்­ப­டுத்­த­மு­டி­ய­வில்லை. இந்­நி­லையில் நாட்டில் பல்­வேறு பயங்­க­ர­வாத கும்­பல்கள் உரு­வாக்கம் பெற்று தனது இனத்தின் விடு­தலை என்ற பெயரில் தமக்கு அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக முழு நாட்­டை­யுமே பாரிய அழி­விற்­கி­ட்டு சென்­றனர். எனினும் தற்­போது எமது நாடு எங்கே பய­ணிக்­கி­றது என்­பது பெரும் கேள்­விக்­கு­றி­யாக மாறி­யுள்­ளது. புதிய அர­சாங்கம் ஆட்­சி­பீ­டத்­திற்கு வந்­த­தி­லி­ருந்து நாட்டின் தேசிய பாது­காப்பு பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­யுள்­ளது. இது­வ­ரைக்கும் எமது நாட்­ட­வர்கள் முகங்­கொ­டுக்­காத பல்­வேறு ஆபத்­தான நிலை­மை­களை நாம் சந்­திக்க நேரிட்­டது.

இவை­யெல்­லா­வற்­றையும் தாண்டி பௌத்த சாச­னத்­திற்கும் சிங்­கள இனத்­த­வர்­க­ளுக்கும் இந்த நல்­லாட்சி ஆற்­றிய விதம் பெரும் அச்­சு­றுத்­த­லாக காணப்­ப­டு­கி­றது. நாட்டின் 30 வரு­ட­மாக இடம்­பெற்ற கொடிய யுத்தம் கார­ண­மாக ஆயுதம் ஏந்­தி­ய­வர்கள் மற்றும் ஆயு­தத்தை கைவிட்டு நிரா­யுதபாணி­யாக சர­ண­டைந்து ஜன­நா­ய­கத்தின் பக்கம் திரும்­பி­ய­வர்­களும் தற்­போது தமது அதி­கா­ரத்தை பலப்­ப­டுத்தி கொண்­டுள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்­நி­லையில் யுத்தம் நிறை­வ­டைந்து 5 வரு­ட­மா­கி­யுள்ள நிலையில் சர்­வ­தே­சத்­த­வர்கள் ஜன­நா­ய­கத்தின் பெயரில் இலங்­கைக்கு எதி­ராக சதி­திட்டம் தீட்டி வரு­கின்­றனர்.

தற்­போது நாட்டின் பொரு­ளா­தாரம், அர­சி யல், மத விவ­காரம் உள்­ளிட்ட அனைத்து துறைகளும் பெரும் சிக்­க­லுக்கு உள்­ளாகி­யுள்­ளன. குறித்த பிரச்­சி­னையில் சிறிய வர ப்­பி­ர­சா­தங்­க­ளுக்­காக ஒரு சில அர­சி­யல்­வா­திகள் குளிர்­காய்­கின்­றனர். அர­சியல் அமைப்­பிற்கு முர­ணாக பிர­தமர் நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் அர­சாங்­கத்தின் பத­வி­களில் உள்ள அமைச்­சர்­களும் மிகவும் மோச­மாக சாடு­கின்­றனர். பாரா­ளு­மன்றில் பெரும்­பான்­மை­யற்ற கட்­சிக்கு பிர­தமர் பதவி மற்றும் அமைச்சு பத­விகள் வழங்­கு­வது அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணா­ன­தாகும்.

இந்­நி­லையில் நல்­லாட்சி என்ற பெயரில் அர­சி­ய­ல­மைப்பில் செய்­யப்­படும் திருத்­தங்கள் முரண்­பா­டா­ன­தாக காணப்­ப­டு­கி­றது. அதி­கா­ர­மிக்க கதி­ரைக்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் மோதி கொள்ளும் நிலைமை நாட்டில் காணப்­ப­டு­கி­றது. எனவே நாட்டில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு பிர­தமர் பதவி வில­கு­வதோ, பாரா­ளு­மன்­றத்தை கலைப்­பதோ ,தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதோ ஒருபோதும் தீர்வாக கருதப்பட மாட் டாது. அதற்கு மாறாக பௌத்த சாசனத்தையும் சிங்கள இனத்தவர் களின் உரிமை களையும் பாதுகாப் பதே உரிய வழிமுறையாக கருதப்படும் என்றார்

Related

பொதுமக்களின் காணியில் விகாரை அமைக்கும் பணியில் இராணுவத்தினர்

முல்லைத்தீவு கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக விகாரை அமைக்கப்பட்டு வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலைக் க...

சற்றுமுன் பொறல்ல பள்ளிவாயல் கல்வீச்சுத் தாக்குதல்!

சற்று முன்னர் பொறல்ல பள்ளிவாயல் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட தாக்குதலால் பள்ளிவாயலின் சில கண்ணாடிகள் உடைந்துள்ள நிலையில்,&n...

வில்பத்து விவகாரம் ; மக்களை மீள்குடியேற்ற முடியும்- அமைச்சர் ராஜித

வில்பத்து பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக பாதுகாக்கப்பட்ட பிரதேச எல்லையை குறைத்து மக்களை மீள்குடியேற்ற முடியும். கடந்த காலத்தில் தேசிய பூங்காக்களை அண்மித...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item