யேமென் போர் நிறுத்தம் குறித்து சவுதி மன்னருடன் அதிபர் ஒபாமா தொலைபேசி உரையாடல்!!

அமெரிக்க அதிபர் ஒபாமா யேமென் போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசி மூலம் அவசர ஆலோசனை நட...







அமெரிக்க அதிபர் ஒபாமா யேமென் போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் வெள்ளை மாளிகையில் இருந்து தொலைபேசி மூலம் அவசர ஆலோசனை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

யேமென் தலைநகர் சனாவைக் கைப்பற்றி சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகளின் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களை சந்தித்து வரும் ஷைட்டி பிரிவின் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து வரும் ஈரானுடன் செவ்வாய்க்கிழமை அணுவாயுத ஒப்பந்தம் இறுதி செய்யப் பட்டதை அடுத்தே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இத்தொலைபேசி உரையாடலில் யேமென் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் வழிவகைகள் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தப் பட்டதாக வெள்ளை மாளிகையில் இருந்து அறிவிக்கப் பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் யேமெனில் ஐ.நா சபையின் முயற்சியால் தற்போது 6 நாட்கள் தற்காலிக யுத்த நிறுத்தம் கடைப் பிடிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் யேமெனில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ஆடென் விமான நிலையத்தை சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் கைப்பற்றி சில மணித்தியாலங்களுக்குள் குறித்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலில் முக்கியமாக யுத்தத்தை உடனே நிறுத்தி, போரினால் பாதிக்கப் பட்ட யேமெனியர்களுக்கு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உதவிகள் சென்று சேர்வதற்கான வழிகள் திறக்கப் பட வேண்டும் எனவும் இப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் முன் வர வேண்டும் எனவும் அமெரிக்கத் தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

Related

நரேந்திர மோடி அரசுக்கு தில்லி வாக்காளர்கள் கொடுத்த மரண அடி: வைகோ

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் ஆம் ஆத்மி கட்சி  வெற்றி பெற்றுள்ளதையடுத்து வரும் 14ம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜிரிவால் முதல்வர் பதவியேற்க உள்ளார். இது குறித...

இஸ்லாமிய தீவிரவாதிகளின் தளபதி கொல்லப்பட்டார்

அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதல் சம்பவத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவின் ஆப்கானிஸ்தானிய கிளையின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். முல்லா அப்துல் ரஃப் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், பயணித்த வாக...

எகிப்தில் கால்பந்தாட்ட போட்டியின் போது கலவரம்: 14 பேர் பலி

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தால் 14 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர். கெய்ரோவில் உள்ள ஏர் டிபன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item