மோதல் : இது கிரிக்கெட் அல்ல...

''மஹேல நீங்கள் எங்­க­ளுக்­காக துப்­பாக்கிக் குண்­டு­க­ளையே தாங்கினீர்கள் உங்­க­ளுக்­காக நாங்கள் சில கற்­க­ளை­யா­வது தாங்க மாட்­டோமா?...

''மஹேல நீங்கள் எங்­க­ளுக்­காக துப்­பாக்கிக் குண்­டு­க­ளையே தாங்கினீர்கள் உங்­க­ளுக்­காக நாங்கள் சில கற்­க­ளை­யா­வது தாங்க மாட்­டோமா?''
கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (19.07.2015) அன்று கெத்­தா­ராமை கிரிக்கெட் மைதா­னத்தில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தத்தை அடுத்து இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும் இலங்கை கிரிக்­கெட்டின் ஆலோ­ச­க­ரு­மான மஹேல ஜய­வர்­தன தனது டுவிட்­டரில் 'போட்டி முடி­வு­களை சிறந்த மனப்­பாங்­குடன் ஏற்று விளை­யாட்டை இர­சிக்­க­வேண்டும்.



சில இர­சி­கர்­க­ளினால் இழைக்­கப்­பட்ட இந்தத் தவறு சகல இர­சி­கர்­க­ளையும் பாதிக்­காது என நம்­பு­வோ­மாக' என பதி­வேற்­றி­யி­ருந்தார்.

இதற்கு பதி­ல­ளிக்­கு­மு­க­மா­கவே முதற்­சொன்ன வச­னத்தை தனது டுவிட்டர் பக்­கத்தில் பதி­வேற்­றி­யி­ருந்தார் பாகிஸ்­தா­னியர் ஒருவர்.


அன்று நடந்­தது என்ன? :
கெத்­தா­ராம ஆர் பிரே­ம­தாஸ கிரிக்கெட் மைதானம் பாகிஸ்தான் அணிக்கு சாத­க­மான மைதானம் என்­பது கிரிக்கெட் ரசி­கர்­க­ளுக்கு தெரியும். ஆனால் அண்­மைக்­கா­ல­மாக இலங்கை அணியும் இந்த மைதா­னத்தில் வெற்­றி­களை சுவீ­க­ரித்­து­வந்­தது.

இலங்கை பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்­றா­வது ஒருநாள் போட்டி கெத்­தா­ராம ஆர்.பிரே­ம­தாஸ அரங்கில் இடம்­பெற்­றது. அன்­றைய தினம் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணி அபா­ர­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

பதி­லுக்கு இனிங்ஸை ஆரம்­பித்த இலங்கை அணி ஆரம்பம் முதலே தடு­மா­றி­யது.

பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடையில் கெத்­தா­ராம ஆர்.பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­யின்­போது அரங்கில் பார்­வை­யா­ளர்­க­ளுக்­கான "டி" பகு­தியில் மோதல் இடம்­பெற்­றது. மது போதையில் இருந்த இரு­த­ரப்­புக்­கி­டை­யி­லேயே இந்த மோதல் உரு­வா­கி­யுள்­ளது.

இந்த மோதலில் ஈடு­பட்­ட­வர்கள் பொலி­ஸா­ரினால் அரங்­கி­லி­ருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து அரங்­கிற்கு வெளியே கடும் மோதல் இடம்­பெற்­ற­துடன் அங்கு நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னங்­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­பட்­டன.

போதாக்­கு­றைக்கு அரங்­கிற்கு வெளியே மோதலில் ஈடு­பட்­ட­வர்கள் கையில் அகப்­பட்ட பொருட்­களை அரங்கை நோக்கி எறிந்­தனர்.
அரங்கின் தென்­கி­ழக்குப் பகு­தியில் எண்­ணிக்கைப் பல­கைக்கு அருகில் களத்­த­டுப்பில் ஈடு­பட்­டி­ருந்த யசீர் ஷா வுக்கு அருகில் கல் ஒன்று வீழ்ந்­ததை அடுத்து அவர் தனது அணித் தலை­வ­ரிடம் முறை­யிட்டார்.

அதை­ய­டுத்து பாகிஸ்தான் வீரர்கள் அனை­வரும் ஆடு­க­ளத்­திற்கு அருகில் அழைக்­கப்­பட்­டனர். அதே­நேரம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட பகு­திக்­குள்ளும் ஒரு கல் வந்து வீழ்ந்­தது.

இந்த சம்­ப­வத்­தினால் இரவு 9.30 மணி அளவில் ஆட்டம் தடைப்­பட்­டது. அந்த சந்­தர்ப்­பத்தில் 317 ஓட்­டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிக்­கொண்­டி­ருந்த இலங்கை 33.3 ஓவர்­களில் 7 விக்­கெட்­களை இழந்து 158 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

வீரர்கள் அனை­வரும் ஆடு­க­ளத்­திற்கு அருகே அமர்ந்­தி­ருக்­கையில் போட்டி பொது மத்­தி­யஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத், வீரர்­களின் பாது­காப்பைக் கருத்தில் கொண்டு அவர்­களை தங்­கு­ம­றைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் அவ­ச­ர­மாக அழைக்­கப்­பட்ட விசேட அதி­ரடிப் படை­யினர் அரங்­கிலும் அரங்­கிற்கு வெளி­யிலும் பாது­காப்பை உறுதி செய்­ததை அடுத்து 32 நிமிட நேர தடையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்­தது.

இந்த மோத­லுக்கும் கிரிக்கெட் போட்­டிக்கும் எவ்­வித சம் பந்­தமும் இல்­லாத போதிலும் இலங்கை கிரிக்கெட் வரலாற் றில் அரங்­கிலோ அரங்­கிற்கு வெளி­யிலோ இவ்­வா­றான ஒரு சம்­பவம் இடம்­பெற்­றது இதுவே முதல் தட­வை­யாகும்.


போதையில் பாது­காப்பு அதி­காரி :
குறித்த போட்­டியின் பாது­காப்­புக்குப் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த அதி­காரி மது­போ­தையில் வீட்டில் உறங்கிக் கொண்­டி­ருந்­தார் என தகவல் கசிந்­துள்­ளன.



போட்டி ஆரம்­ப­மா­வ­தற்கு முன்னர் மது அருந்தி விட்டு அவர் வீடு சென்­றி­ருக்­கிறார் என்றும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.


நிலை­மையை கட்­டுப்­ப­டுத்­திய பாது­காப்பு தரப்­பினர் :
மைதா­னத்தின் மேல் ஆசன வரி­சையில் இருந்­த­வர்­களும் கீழ் ஆசன வரி­சை­களில் இருந்­த­வர்­களும் போத்­தல்­க­ளாலும் பொல்­லு­க­ளாலும் ஒரு­வ­ரை­யொ­ருவர் தாக்கி கொண்­டனர்.

இதனைத் தொடர்ந்து கெத்­தா­ராம, மாளி­கா­வத்தை பிர­தே­சங்­க­ளிலும் பதற்­ற­மான நிலை காணப்­பட்­டது.



மோத­லினால் மைதா­னத்தின் சில மின்­கு­மிழ்­களும் வெளியே நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வாக­னங்­களும் சேத­மாக்­கப்­பட்­டி­ருப்­பட்­டன.

கெத்­தா­ராம மைதான கைக­லப்­பி­னை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் உட­ன­டி­யாக வந்து நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.

கெத்­தா­ராம விளை­யாட்டு மைதா­னத்தில் இலங்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசி­கர்­க­ளி­டையே இடம்­பெற்ற கைக­லப்பு தொடர்பில் நான்கு இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

இந்த கைக­லப்பில் காய­ம­டைந்த ஆண் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் நார­ஹேன்­பிட்­டி­ய­வி­லுள்ள பொலிஸ் ஆஸ்­பத்­தி­ரியில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சைப் பெற்று வரு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.




'போட்டி முடி­வு­களை சிறந்த மனப்­பாங்­குடன் ஏற்று விளை­யாட்டை இர­சிக்­க­வேண்டும். சில இர­சி­கர்­க­ளினால் இழைக்­கப்­பட்ட இந்தத் தவறு சகல இர­சி­கர்­க­ளையும் பாதிக்­காது என நம்­பு­வோ­மாக'




தனிப்­பட்ட சிலர் செய்த தவ­றுக்­காக எல்­லோ­ரையும் குறை­காண முடி­யாது. எமது ஆத­ரவு இலங்­கைக்கும் ர­சி­கர்­க­ளுக்கும் எப்­போதும் இருக்­கின்­றது'

பொலிசார் மீது குற்­றச்­சாட்டு :
கெத்­தா­ராம மைதா­னத்தில் இடம்­பெற்ற முறு­க­லை­ய­டுத்து ஏற்­பட்ட மோதல்­க­ளின்­போது பொலிஸார் நியா­ய­மற்­ற­மு­றையில் நடந்­து­கொண்­ட­தா­கவும் குற்­றச்­செயல்­களில் ஈடு­ப­டாத அப்­பாவி முஸ்லிம் இளை­ஞர்­க­ளையே கைது செய்­துள்­ள­தா­கவும் மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

மைதா­னத்தில் இடம்­பெற்ற இரு­வ­ருக்­கி­டை­யி­லான முறு­கலே பெரும் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மைதா­னத்தில் இருந்த தரப்­பி­ன­ரா­லேயே பள்­ளி­வா­ச­லுக்கு கல் எறி­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மைதா­னத்­திற்கு வெளியில் இருந்­த­வர்­களால் விளை­யாட்­ட­ரங்கை நோக்கி கல் எறி­யப்­பட்­டுள்­ளது. இவர்­களை பொலி­ஸாரால் தடுத்­து­நி­றுத்த முடி­ய­வில்லை.

ஆனால் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பற்ற அப்­பாவி இளை­ஞர்­க­ளையே மாளி­கா­வத்தை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இவர்கள் எந்­த­வி­த­மான தக­ரா­றிலும் ஈடு­ப­டாது கிரிக்­கெட்­போட்­டியை பார்க்கச் சென்­ற­வர்­களே. போட்­டியை கண்­டு­க­ளித்­து­விட்டு வெளியில் வரும்­போது அநி­யா­ய­மாக இவர்கள் கைதா­கி­யுள்­ளனர்.

எனவே இது விட­யத்தில் சரி­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு அப்­பாவி இளை­ஞர்கள் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.


இன­வாத சாயம் :
கெத்­தாராம விவ­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு விமல் வீர­வங்ச, உதய கம்­பன்­பில, வாசு­தே­வ­நா­ண­யக்­கார, பொது­ப­ல­சேனா, ராவ­ண­ப­லய உள்­ளிட்ட சிங்­கள பௌத்த கடும்­போக்கு சக்­திகள் இதனை சிங்­கள முஸ்லிம் பிரச்­சி­னை­யாக பூதா­க­ர­மாக்க முற்­ப­டு­கின்­றன. இந்த தேர்தல் காலத்தில் இதனை மைய­மாக வைத்து பிரச்­சா­ரங்­களை முன்னெடுத்து வருகின்றனர்.




விட­யத்தை பெரி­து­ப­டுத்த வேண்டாம் :
கொழும்பு ஆர். பிரே­ம­தாசா மைதா­னத்தில் பார்­வை­யா­ளர்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட கைக­லப்பு கார­ண­மா­கவே அருகில் உள்ள மாளி­கா­வத்தை மஸ்­ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆப் பள்­ளி­வாசல் கல்­வீச்­சுக்கு இலக்­காகி கண்­ணா­டிகள் சேத­ம­டைந்­துள்­ளன.

எனினும் இச் சம்­பவம் எவ்­வித இன முரண்­பா­டு­களினதும் பின்­ன­ணியைக் கொண்­ட­தல்ல என்றும் விளை­யாட்டு மைதா­னத்­தினுள் இடம்­பெற்ற கைக­லப்­பின்­போது வீசப்­பட்ட பொருட்­களால் ஏற்­பட்ட தற்­செ­ய­லான சேதமே என்றும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் இம்­தியாஸ் அஹமட் தெரி­வித்தார்.

எனினும், இத­னை­ய­டுத்து விளை­யாட்டு மைதா­னத்தில் D தொகு­திக்கு அரு­கா­மையில் பள்­ளி­வாசல் அமைந்­துள்­ளதால் அப்­ப­கு­தியை சுற்­றி­வர ‘நெட்” மூலம் மறைத்து பாது­காப்பு வழங்­கு­மாறு அப்துல் சலாம் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை விளை­யாட்டு மைதா­னத்­துக்குப் பொறுப்­பான அதி­கா­ரி­களை வேண்­டி­யுள்­ளது.


உலமா சபை அறிக்கை :
வெற்­றியின் போதும் போட்டி நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் போதும் நமது நாட்டின் ஐக்­கி­யத்­திற்கும் சக­வாழ்­வுக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் சக­லரும் நடந்து கொள்­ள­வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்­டுகோள் விடுத்­தது.

19.07.2015 ஆம் திகதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் போது சிலர் விளை­யாட்டு மைதா­னத்தில் பிழை­யாக நடந்து கொண்­டதை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம்.

தவ­றி­ழைத்­த­வர்கள் யாராக இருந்­தாலும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும்.

சர்­வ­தேச விளை­யாட்­டு­களின் மூலம் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வுகள் பலப்­ப­டு­கின்­றன.

இந்த எல்­லை­களை தாண்டி பரஸ்­பர வெறுப்­பையும் இன முறு­கல்­க­ளையும் தோற்­று­விக்கும் ஊட­கங்­க­ளாக அவற்றை நாம் மாற்றிக் கொள்­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­ன­தல்ல.

இது போன்ற உணர்­வு­பூர்­வ­மான நிகழ்­வுகள் நடை­பெ­று­கின்­ற­போது உல­மாக்கள் தமது குத்பாப் பிர­சங்­கங்­க­ளையும் உரை­க­ளையும் இன ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்­டு­மெ­னவும் மஸ்ஜித் நிர்­வா­கிகள் இந்த விட­யத்தில் கவனம் செலுத்த வேண்­டு­மெ­னவும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வேண்டிக் கொள்­கின்­றது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பொதுச் செய­லாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.


முஸ்லிம் தலை­மைகள் கோரிக்கை :
முஸ்­லிம்கள் எப்­போதும் அனைத்து விட­யங்­க­ளிலும் நாட்டுப் பற்­றுள்­ள­வர்­க­ளாக இருக்க வேண்டும். குறிப்­பாக பாகிஸ்தான்– இலங்கை கிரிக்கெட் போட்­டி­யின்­போது நாட்­டுக்கே முத­லிடம் வழங்க வேண்டும்.

இல்­லையேல் அது முழு சமு­தா­யத்­தையும் பாதிப்­புக்­குள்­ளாக்­கி­விடும் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் உதவிச் செய­லாளர் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிமும், கொழும்பு பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீனும் கூட்­டாக வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

பள்­ளி­வாசல் நிர்­வாகம், நிர்­வா­கத்­துக்­குட்­பட்ட ஜமா­அத்­தி­னர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு கூட்­டங்­களை நடத்தி நிலை­மையை சீராக்­கு­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

மாளி­கா­வத்தை பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உதவிச் செய­லா­ளர்கள் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம், மௌலவி முர்சித் முளவ்பர், உறுப்­பினர் இர்பான் முபீன் ஆகி­யோரும் கொழும்பு பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீனும் சம்­பவம் நடந்த தினம் இரவு ஸ்தலத்­துக்கு நேரடி விஜ­யத்­தினை மேற்­கொண்டு அங்கு சுமுக நிலை­மையை உரு­வாக்­கு­வதில் பங்கு கொண்­டனர்.


பாக். வீரர்களின் கருத்து :
இதே­வேளை, இந்த அமை­தி­யின்­மைக்கு இலங்கை கிரிக் கெட் அதி­கா­ரி­க­ளையோ ர­சி­கர்­க­ளையோ பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்­களும் இர­சி­கர்­களும் குறை கூற­வில்லை.

ஒரு சிறு கும்­பலே இந்த அசம்­பா­விதத்­திற்கு காரணம் எனவும் இலங்கை ரசி­கர்­க­ளுக்கு தாம் ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும் பாகிஸ்தான் வீரர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

'தனிப்­பட்ட சிலர் செய்த தவ­றுக்­காக எல்­லோ­ரையும் குறை­காண முடி­யாது. எமது ஆத­ரவு இலங்­கைக்கும் ர­சி­கர்­க­ளுக்கும் எப்­போதும் இருக்­கின்­றது' என பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தனது ட்விட்டர் பதிவில் குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­போன்ற வார்த்­தை­களை தனது ட்விட்­டரில் முன் னாள் கிரிக்கெட் வீரரும் வர்­ண­னை­யா­ள­ரு­மான ஷொயெப் அக்தார் எழு­தி­யுள்ளார்.

எனினும், விளை­யாட்­டுத்­து­றைக்கு மிகவும் பொருத்­த­மா­னதும் மதிக்­கத்­தக்­க­து­மான நாடு என பல்­வேறு நாடு­க­ளாலும் பிர­மு­கர்­க­ளாலும் புக­ழாராம் சூட்­டப்­பட்­டு­வந்த இலங்­கைக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்தும் வகை­யி­ல் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றமை கவலையளிக்கிறது.

Related

බැසිල් - නාමල් , මංගලගෙන් ආරක්ෂාව ඉල්ලයි

ඇමැති බැසිල් රාජපක්ෂ මහතා සහ පාර්ලිමේන්තු නාමල් රජපක්ෂ මහතා ඊයේ රාත්‍රියේදී එජාප පර්ලිමෙන්තු මන්ත්‍රී මංගල සමරවීර මහතා අමතා ජනාධිපතිවර්ණය යම් කිසි ලෙසකින් ඔවුන් පරාජයට පත්වුව හොත් තමන්ගේ හා පවුලේ සාමා...

மைத்திரியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய தொலைபேசி இலக்கங்கள்

பொது வேட்பாளரின் ஊடக பிரிவு … பொது வேட்பாளரின் (தமிழ்) ஊடக பிரிவு.   நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிக முக்கியமான ஒரு தேர்தல் என்பதை கருத்தில் கொண்டு இலங்கை வாழ் தமிழ் பேசும...

புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை வாக்களிப்பிலிருந்து தடுக்க போக்குவரத்துத் தடை.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் அங்கு வாழும் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத வகையில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக ஒரு தகவல் தற்போது...

Older Post ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில், மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில், தோட்டாக்கள் நிரப்பி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அந்த மாணவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்திருக்கும் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே துப்பாகியோடு நின்றிருந்த மாணவனை பிடித்துள்ளனர். இது தொடர்பில் தெரிய வருவதாவது, கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்றது. பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார். 2014ம் ஆண்டில் பல பிரிவுகளிலும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய 25 மாணவர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் பரிசில்களும் வழங்கப்பட்டன. இதில் ஶ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன மற்றும் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி வைத்திருந்த ஒரு மாணவனை பாதுகாப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் எவ்வாறு இம்மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி கிடைத்திருக்கும்? ஜனாதிபதியை கொல்வதற்கான திட்டமா? என பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item