பொரளை பள்ளி தாக்குதல்

சந்தேக நபர்களான இரு பிக்குகளை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு பொரளை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸாரால் தேட...

சந்தேக நபர்களான இரு பிக்குகளை கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு

பொரளை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரும் சந்­தேக நபர்­க­ளான பௌத்த குருமார் இரு­வ­ரையும் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு கொழும்பு 2 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்ற நீதிவான் பொலி­ஸா­ருக்கு நேற்று உத்­த­ரவு வழங்­கினார்.




பொரளை பள்­ளி­வாசல் கல்­வீச்சு தாக்­குதல் தொடர்­பான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே நீதிவான் பொலி­ஸா­ருக்கு இந்த உத்­த­ர­வினை வழங்­கினார்.

இச் சம்­ப­வம்­தொ­டர்­பாக சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸாரால் கைது செய்யப்­பட்டு சுமார் ஒன்­றரை மாத­கா­ல­மாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள மூன்று சந்­தேக நபர்­க­ளையும் பொலிஸார் நேற்று நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தினர்.

சந்­தேக நபர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் மூவ­ரையும் பிணையில் விடு­மாறு வாதிட்­டனர். சந்­தேக நபர்­களில் ஒரு­வரின் மனைவி கர்ப்­பி­ணி­யாக இருப்­ப­தா­கவும் சந்­தேக நபரில் ஒருவர் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள க.பொ.த. (உ/த) பரீட்சை எழுதும் மாணவர் எனவும் அடுத்த சந்­தேக நபர் சுக­யீ­ன­மாக இருப்­ப­தா­கவும் தெரி­வித்து பிணை வழங்­கு­மாறு நீதி­வானைக் கோரி­ய­தற்­கி­ணங்­கவும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையினர் சார்பில் ஆஜ­ரான RRT சட்­டத்­த­ர­ணிகள் அதற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கா­த­தாலும் நீதிவான் மூன்று சந்­தேக நபர்­க­ளையும் பிணையில் விடு­தலை செய்தார்.

பொரளை பள்­ளி­வாசல் தாக்­குதல் தொடர்பில் தேடப்­பட்டு வரும் இரு பௌத்த தேரர்­களின் வீடு­க­ளுக்குச் சென்று அவர்­களைத் தேடியும் அவர்கள் அங்கு இருக்­க­வில்லை எனவும் அவர்­களைத் தேடிக் கண்­டு­பி­டித்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச் சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் ஒரு அமைப்பும் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­ப­ல­மான நபர் ஒரு­வரும் தொடர்பு கொண்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் ஏற்­க­னவே நீதி­மன்றில் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பொரளை பள்­ளி­வாசல் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி இரவு கல்­வீச்சு தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மை­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்றின் சி.சி.ரி.வி. யின் பதி­வு­களை ஆய்வு செய்து நார­ஹேன்­பிட்­டிய பொலிஸார் கடந்த மாதம் 15 ஆம் திகதி இரு சந்­தேக நபர்­களைக் கைது செய்து 72 மணி­நேர தடுப்­புக்­கா­வலில் வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு பின் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். மூன்­றா­வது சந்­தேக நபர் பொலிஸில் சர­ண­டைந்த பின் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.

மூன்று சந்­தேக நபர்­களும் தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­கா­கவே பள்­ளி­வாசல் மீது கல் எறிந்ததாக பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பள்ளிவாசல் நிர்வாக சபையின் சார்பில் RRTஅமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

Related

தலைப்பு செய்தி 2284380591744104685

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item