புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில் கைதானவர்களிடம் விசாரணை

யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள...

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில் கைதானவர்களிடம் விசாரணை
யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிக்கட்டுவான் பகுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகபர்களும் நேற்று (18) பிற்பகல் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேகநபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

புங்குடுதீவு பகுதியில் கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், காணாமற்போன உயர்தர வகுப்பு மாணவி வித்தியா, மறுநாள் பாழடைந்த காணியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

குறித்த மாணவி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related

ஜனாதிபதியின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்தவரை கைதாக்கவில்லை: ருவன்

அங்குனுகொலபெலஸ்ஸயில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட கூட்டத்தில் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டமை தொடர்பில் பரவலாக பேசப்பட்டுவருகின்றது. ஜனாதிபதி கலந்துக்கொள்...

நிதி மோசடிப் பிரிவில் சிக்கி தவிக்கும் மகிந்த அரசாங்கத்தின் அதிகாரிகள்!

அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் காந்தி விஜேதுங்கவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இவரிடம் காலை 9...

19வது திருத்தம் நிறைவேறுவது சிங்களவர்களின் மரண பிடியாணை நிறைவேறியதை போன்றது: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

சத்தியாகிரகம் செய்து 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டால், அது சிங்களவர்கள் மரணத்திற்கான பிடியாணையை நிறைவேற்றிக்கொண்டது போலாகும் என ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item