ஈரானியர்கள் சவூதிக்கு உம்ரா செல்ல ஈரான் தடைவித்துள்ளது
ஈரானிய மக்கள் உம்ரா புனித யாத்திரைக்குச் செல்வதை இரான் இடைநிறுத்தியுள்ளது ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே, ஜெமன் மோதல் குறித்த...


கடந்த மாதம் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இரண்டு ஈரானிய ஆண் யாத்ரிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, உம்ரா பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக ஈரானின் கலாசார அமைச்சு கூறியுள்ளது
இந்த சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை இந்த இடை நிறுத்தம் நீடிக்கும் என்று ஈரானிய கலாசார அமைச்சர் அறிவித்துள்ளார்
இந்த சம்பவம் தொடர்பாக தெஹ்ரானில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்தின் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுள்ளது . ஆண்டுதோறும் , சுமார் ஐந்து லட்சம் ஈரானியர்கள் உம்ராவுக்காக சவூதி அரேபியா செல்கிறார்கள்என தெரிவிக்கப் படுகிறது