மஹிந்தவின் அனுசரணையில் பாதாள உலகத்தோடு சோ்ந்து பணம் பறித்த ஐாிஎன் ஊடகவியலாளா்!
ஐ.ரி.என். ஊடகவியலாளா் சுதா்மன் ரதலியகொடவின் கடவுச் சீட்டை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தோ்தலின் போது பொய்யான ...


ஐ.ரி.என். ஊடகவியலாளா் சுதா்மன் ரதலியகொடவின் கடவுச் சீட்டை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தோ்தலின் போது பொய்யான செய்திகளை ஒளிபரப்பிய குற்றச்சாட்டுக்கு இவா் உள்ளாகி இருப்பதால் கொழும்பு கோட்டை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரெலிகொம் நிறுவனத்தின் இரும்புகளை தவறான தகவல்களை வழங்கி மோசடியாக பெற்றுக்கொண்டதாக இவா் மீது கடுவலை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பாதாள கோஷ்டிகளுடன் இவருக்கு இருந்த உறவும், அரச பாதுகாப்பு தரப்போடு இவருக்கு இருந்த உறவும் மக்களிடம் பணம் பறிப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கின்றன. வெள்ளை வேனால் கடத்தப்பட்ட பாதாள உலக கோஷ்டியைச் சோ்ந்த கராத்தே தம்மிக என்பவரை மீட்டுத் தருவதாக 63 லட்சங்களை கராத்தே தம்மிகவின் மனையிடம் பெற்றுக் கொண்டு அவரை ஏமாற்றியும் உள்ளாா். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பலாிடம் பணம் வாங்கி மோசடிகளில் ஈடுபட்டுள்ளவா்தான் இந்த சுதா்மன் ரதலியகொட. ஐாிஎன் அலுவலத்தில் வைத்தே இந்த சட்டவிரோத செயற்பாடுகளில் இந்த ரதலியகொட ஈடுபட்டுள்ளாா்.

ஐாிஎன் காாியாலயத்தில் துப்பாக்கியை தனது இடுப்பில் சொறுகிக் கொண்டு வேலைசெய்யும் அளவிற்கு மஹிந்த சகோதரர்களின் அனுசரணை இவருக்குக் கிடைத்திருக்கிறது.
அண்மையில் நெத் எப் எம் வானொலி சுதா்மன் ரதலியகொடவின் திருவிளையாடல்களை வெளிக்கொணரும் பெலும்கல நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. மஹிந்த ஆட்சியில் இந்த நாட்டின் சட்டம் ஓா் இருட்டறையில் உறங்கிக் கிடந்தது என்பதற்கு இந்த நிகழ்ச்சி சிறந்த சான்று.
[youtube https://www.youtube.com/watch?v=GOxBB4VLGu0]