மகிந்த ஆட்சியின் ஊழல், மோசடிகளை விசாரிக்க ரணில் தலைமையில் குழு!
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாட்டில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_544.html
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாட்டில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.இந்தக் குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்), மங்கள சமரவீர, பாட்டளி சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க, ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, சட்டத்தரணி வெலியமுன, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர். இந்த குழுவில் ஜே.வி.பியின் தவைவர் அனுரகுமார திஸாநாயக்க இணைப்பாளராக செயற்படுவார் என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate