மஹிந்தவின் பாதுகாப்புக்கு வந்தது ஆப்பு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி காவற்துறைமா அதிபர் எம்.கே. இலங்ககோனுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்...


30 வருடகால போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பல முறை தெரியவந்தது எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்சவிற்கு காவற்துறை மற்றும் இராணுவத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட பாதுகாப்புபப் பிரிவினரை அரசாங்கம் பாதுகாப்பிற்காக வழங்கியிருக்கின்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி தனக்கு இன்னமும் பாதுகாப்பு போதாதென குறிப்பிட்டுள்ளார்.
இதனால் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்படும் என்ற பயத்தில் இவ்வாறு தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கோரியுள்ளதாக அரசியல் தரப்பில் பேசப்படுகின்றது.
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!