பசிலும், மனைவியும் மற்றுமொரு சிக்கலில் சிக்கினர்! உதவிய அதிகாரிகளும் மாட்டினர்

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியை சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு அனுப்பி வைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான ந...

1421047197_9191407_22724_srisara
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியை சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு அனுப்பி வைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய மற்றும் முகாமையாளர் சேன நந்திவீர ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமான நிலைய தொழிற்சங்கங்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்வதற்கு உரிய அனுமதி பெற்றுக்கொள்ளாது பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்ய வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சு அல்லது நாடாளுமன்றின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

விமான நிலையத்தின் தலைவர் பிரசன்னவின் அறிவுறுத்தலுக்கு முகாமையாளர் சேன சந்திவீரவின் கையொப்பத்துடன் பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவரது மனைவியும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் அதற்கு விமான நிலைய நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் எழுத்து மூலம்தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related

நிதிக் குற்றவியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சகல கைதுகளையும் ரத்து செய்யுமாறு மேன்முறையீடு

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சகல கைதுகளையும் ரத்து செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி பொலிஸ் மா அதி...

பொதுத் தேர்தலில் போட்டியிட நான் யாரிடமும் வேட்பு மனு கோரவில்லை: மஹிந்த

அபயாராமய விஹாரை தேர்தல் காரியாலம் அல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வென்னப்புவ மற்றும் குளியாப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கட்சி செயற்பாட்டாளர்கள் அபயாராமயவில் மஹிந்தவ...

பாகிஸ்தானிய இராணுவ தலைமையதிகாரி இலங்கை வந்துள்ளார்!

பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையதிகாரி ஜெனரல் ரஹீல் சரீப் இன்று மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு தடவைகளாக இலங்கைக்கு அவர் விஜயம் செய்யவிருந்த போதிலும் உள்நாட்டு குழப்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item