இரண்டு மாதத்தினுள் தேர்தல்! யானை வெற்றி பெறுவது உறுதி!– விஜேதாஸ ராஜபக்ச
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் 02 மாதத்தினுள் இடம்பெறும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_931.html

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் 02 மாதத்தினுள் இடம்பெறும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலை போன்று வரலாற்றில் இல்லாத தேர்தல் முடிவொன்றை இம்முறை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அனைவரும் ஒன்றினைந்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்று அமைப்பதனை பார்த்துக்கொண்டிருக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
நாங்கள் புதிய யுகம் ஒன்றினை உருவாக்கி கொடுத்துள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 40 வருடங்களில் செயற்பட்ட அரசாங்கங்களினால் மேற்கொள்ள முடியாத காரியங்களை நாங்கள் 150 நாட்களில் செய்து முடித்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அதே போன்று எதிர்வரும் 02 மாதங்களினுள் பொது தேர்தல் இடம்பெறும் என மக்களுக்கு வாக்குறுதியளிப்பதாகவும், அதற்கு மக்களின் ஆதரவினை வழங்குமாறும் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate