தன்னை தள்ளி விட்ட தோனியை பழிவாங்கிய முஸ்பிகுர் ரஹ்மான்

இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மிர்புரில் நேற்று நடைபெற்றது. இந்த ...

தன்னை தள்ளி விட்ட தோனியை  பழிவாங்கிய முஸ்பிகுர் ரஹ்மான்
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மிர்புரில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் 79 ஓட்டங்களால் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்தியாவுக்கு எதிராக 30 ஆவது ஒரு நாள் போட்டியில் ஆடிய பங்களா​தேஷ் அணி பெற்ற 4 ஆவது வெற்றி இதுவாகும். அதிலும் இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது.

இந்திய அணி 123/4 என்ற நிலையில் ஆட்டத்தின் 25 ஆவது ஓவரில் அறிமுக இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்பிகுர் ரஹ்மான் தோனிக்கு யோக்கர் பந்தினை வீச அதனை எதிர்கொண்ட தோனி தடுத்தாடி விரைவாக ஒரு ஓட்டத்தினைப் பெற்றுக்கொள்ள முயன்றார்.இதன்போது தோனியின் ஓட்டத்திற்கு தடையாக நின்ற முஸ்பிகுர் ரஹ்மானை பலமா இடித்துத் தள்ளினார்.

உடனடியாக நடுவரிடம் சென்ற தோனி தனது ஓட்டத்திற்கு தடையாக நின்றரமையினாலேயே அவ்வாறு தள்ளியதாக கூறினார். எனினும் இந்த எதிர்பாராத நிகழ்வால் நிலை தடுமாறிய முஸ்பிகுர் ரஹ்மான் தொடர்ந்து பந்து வீசாமல் ஓய்வு அறை நோக்கிச் சென்று விட்டார்.

மேலும் அடுத்த ஓவரிலேயே சகிப் அல் ஹசனின் பந்துவீச்சில் தோனி ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் மீண்டும் களம் புகுந்த அறிமுக வீரர் முஸ்பிகுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அறிமுக வீரர் பங்களாதேஷ் அணி சார்பில் 5 விக்கெட்டுக்களை சரிப்பது இது இரண்டாவது முறையாகும். அத்துடன் இவர் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கைத் அணித் தெரிவுக்குழுவிலிருந்து சனத் ஜெயசூரியா ராஜினாமா

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இவர் தனது இராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச...

ஐபிஎல் சுற்றுத்தொடர்: சென்னையில் விளையாடுவாரா அஞ்சலோ மேத்யூஸ்?

8வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் 12 மைதானங்களில், எதிர்வரும் 8ம் திகதி முதல் மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளது.எதிர்வரும் 9ம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்...

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை!

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item