புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக வரலாறு காணாத வழக்கும் தீர்ப்பும்

லட்சக் கணக்கானோருக்கு கோடிக் கணக்கான டாலர்கள் நட்ட ஈடு வழங்கி கனடா நீதிமன்றம் தீர்ப்பு சிகரெட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் புகை பிடிப...

லட்சக் கணக்கானோருக்கு கோடிக் கணக்கான டாலர்கள் நட்ட ஈடு வழங்கி கனடா நீதிமன்றம் தீர்ப்பு
சிகரெட்டுகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து போதிய எச்சரிக்கை விடுக்காததால் மூன்று புகையிலை நிறுவனங்களுக்கு 12 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நட்ட ஈடு வழங்கி கனடா நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களுக்கு போதிய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறி, புகை பிடிப்பவர்கள் கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் இந்த வழக்கை முன்னெடுத்தனர்.

கனேடிய நீதிமன்ற சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்றாக இணைந்து ஒரே காரணத்துக்காக இந்த வழக்கை கொண்டு வந்தனர்.

இந்த வழக்கை புகை பிடித்ததால் மிகவும் மோசமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்ட ஒரு குழுவினரும், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு குழுவினரும் இணைந்து முன்னெடுத்தனர்.

எனினும் தீர்ப்பை எதிர்த்து இம்பீரியல் டொபாகோ, ராத்மேன்ஸ் பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸ் மறும் ஜெடிஐ மெக்டொனால்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும் மேல் முறையீடு செய்யவுள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி இந்த வழக்கை 1998 ஆம் ஆண்டே பதிவு செய்திருந்தாலும், அண்மையில்தான் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Related

இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது: - "டெலிகிராஃப்' நாளேடு பரபரப்பு தகவல்!

பாகிஸ்தானிலிருந்து அணு ஆயுதத்தைக் கடத்திச் சென்று, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ஐ.எஸ். பிரசார ஏட்டை மே...

விபத்தில் துண்டான வாலிபரின் தலையை ஒட்ட வைத்து உயிர் பிழைக்கச் செய்த இந்திய டாக்டர்!

பிரிட்டனில், கார் விபத்தில் துண்டான வாலிபரின் தலையை ஒட்ட வைத்து, அவரை உயிர் பிழைக்கச் செய்துள்ளார், இந்திய டாக்டர் ஆனந்த் காமத். பிரிட்டனின் நியூகேசில் நகரைச் சேர்ந்தவர், டோனி கோவான். கடந்தாண்டு செப...

யாழ்.மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியாயமானதே! - மாதுலுவாவே சோபித தேரர்

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை சம்­பவம் தொடர்பில் மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியா­ய­மா­னதே. பாட­சாலை சிறு­மியை பாலியல் கொடு­மைக்கு உள்­ளாக்கி கொலை செய்த நபர்­களை மக்கள் தண்­டிக்க ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item