உலகின் 3 கண்டங்களில் தீவிரவாதத் தாக்குதல்!:துனிசியா ஹோட்டல் தாக்ககுதலில் 28 பேர் பலி

உலகின் 3 கண்டங்களில் அதாவது ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள துனிசியாவிலுள்ள ஓர் ஹோட்டலிலும், மத்திய கிழக்கில் உள்ள குவைத்தில் அமைந்திருக்கும் ஓர...



உலகின் 3 கண்டங்களில் அதாவது ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள துனிசியாவிலுள்ள ஓர் ஹோட்டலிலும், மத்திய கிழக்கில் உள்ள குவைத்தில் அமைந்திருக்கும் ஓர் ஷைட்டி முஸ்லிம்களின் பள்ளிவாசலிலும் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள பிரான்சின் இரசாயனத் தொழிற்சாலைக்கு அண்மையில் ஜிஹாதிஸ்ட்டுக்களின் 3 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உலகை அதிர வைத்துள்ளன.

இதனால் நிகழ் காலத்தில் எழுச்சி பெற்று வரும் ISIS போன்ற ஜிஹாதிஸ்ட்டு அமைப்புக்களின் ஆபத்து குறித்த சர்வதேசங்களின் கவலை அதிகரித்துள்ளது. மிக மோசமான தாக்குதலாக துனிசியாவின் பிரபல சுற்றுலாத் தளமும் சௌஸ்ஸே கடற்கரையோர நகரிலுள்ள ரியு ஹோட்டல் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூடு பதியப் பட்டுள்ளது. இதன்போது 28 பேர் கொல்லப் பட்டதாகவும் 36 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப் பட்டதாகவும் தெரிய வருகின்றது. துனிசியாவின் தலைநகர் துனிஸ் இலிருந்து 150 Km தொலைவில் நடைபெற்ற இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

மறுபுறம் மத்திய கிழக்கு நாடான குவைத்தின் தலைநகரில் மத்தியிலுள்ள ஷைட்டி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்குள் நடத்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர். 25 இற்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப் படுகின்றது. அண்மைக் காலமாக மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் ஷைட்டி முஸ்லிம்களின் மதத் தலங்கள் மற்றும் பொது இடங்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வரும் ISIS அமைப்பு இதற்கும் பொறுப்பேற்றுள்ளது.

3 ஆவது தீவிரவாதத் தாக்குதல் பிரான்ஸின் தென்கிழக்கே அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை அருகே நடத்தப் பட்டுள்ளது. குறித்த கட்டடத்தைத் தகர்க்கத் தீவிரவாதிகள் முயன்றதாகவும் ஆனால் அது முறியடிக்கப் பட்டதாகவும் தெரிய வருகின்றது. இதில் ஒருவர் தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் பட்டதாகவும் இருவர் காயம் அடைந்ததாகவும் பிரான்ஸ் காவற்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் உலகின் வெவ்வேறு 3 கண்டங்களை அதிர வைத்த இந்த 3 தாக்குதல்களுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரூன் உட்பட உலகத் தலைவர்கள் டுவிட்டர் மூலமாகவும் ஊடக அறிக்கைகள் வாயிலாகவும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

Related

ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆயுதத்துடன் ஒருவர் சென்றமை தொடர்பில் மேலும் இருவர் கைது

அங்குனகொலபெலஸ்ஸயில் ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டமொன்றுக்கு துப்பாகியுடன் இராணுவக் கோப்ரல் சென்ற சம்பவம் தொட்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பாதுகாப்...

ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் மரணம் கொலையே என்று பொலிஸ் தீர்மானம்

ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் மரணம் கொலை என்பதை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர் இதன்படி விசாரணைகள் முடிவுறுத்தப்பட்;டு அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்...

ஜப்பானில் பணியாளரை விற்ற மேஜர் ஜெனரல்

பணியாளர் ஒருவரை மேஜர் ஜெனரல் ஒருவர் 70,000 யென்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜப்பானுக்கான இலங்கைத் தூதரகத்தில் கடயைமாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஒருவரே இவ்வாறு, தனது பணியாளரை அ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item