பிரித்ததானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைப் பெண்!

பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப் பெண் ஒருவர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 1979ம...



பிரித்தானியாவில் முன்னணி அரசியல்வாதியான இலங்கைப் பெண் ஒருவர் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். 1979ம் ஆண்டு பிறந்த 36 வயதான சமலி பெர்னாண்டோ, என்பவரே இந்த இலங்கைப் பெண் ஆவார். அவரது தாய் வனிதா பெர்னாண்டோ(தாதி), தந்தை சுமல் பெர்னாண்டோ(சட்டத்தரணி).


தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் சமலி பெர்னாண்டோ, இம்முறை இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில், கேம்பிரிட்ஜ் நகரில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். பிரித்தானியாவின் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது. சட்டத்தரணியான சமலி பெர்னாண்டோ பிரித்தானியாவின் பாரிஸ்டர் பட்டதாரியும் ஆவர்.

சட்டத்தரணி தொழிலுக்கு மேலதிகமாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தும் அவர், மனநோயாளர்களுக்கு கையுறை ஒன்றையும் அணிவிக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். சமூகத்தில் மன நோயாளர்களுக்கு தேவையான உபசரிப்புக்கள் கிடைக்கப்பெறவேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

அதேவேளை அவர் தற்பொழுது பிரித்தானியா அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு பெண்ணாகவும் காணப்படுகிறார். தனது உயர்கல்விக்காக அரசியலை தெரிவு செய்த காலம் தொட்டு, அரசியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக சமலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related

சந்திரனில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் அணிந்திருந்த சூட் காட்சிப்பொருள் ஆகின்றது: பாதுகாக்க 5 லட்சம் டாலர் குவிந்தது

அப்போலோ-11 விண்கலம் மூலம் சாகசப் பயணம் மேற்கொண்டு சந்திரனில் காலடித்தடம் பதித்த உலகின் முதல் மனிதராக 21-7-1969 அன்று புதிய விஞ்ஞான சாதனையை ஏற்படுத்தியவர், நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அதன் பின்னர் பல்வேறு...

தரை இறங்கும் சந்தர்ப்பத்தில் விமானத்திற்கு தீ வைக்க முயன்ற பயணி

சீனாவில் ஹொங்கொங் அருகே உள்ள தாய்ஜோ நகரில் இருந்து குவாங்ஜோ நகருக்கு ஷென்ஜென் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றது.அந்த விமானத்தில் 95 பயணிகளும், 9 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் அதிகாலை ஒரு மணி அளவில் ...

சீனாவில் 2 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிப்பது தொடர்பில் அரசு பரிசீலனை!!

உலகில் மிக அதிக சனத்தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக சில தசாப்தங்களாகவே ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மாத்திரமே பெற்றுக் கொள்ளலாம் எ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item