இது எமது அரசாங்கம்! தந்தையின் கொலைக்கு நியாயம் கிடைக்கும்: ஹிருனிகா
எனது தந்தையின் கொலை தொடர்பில் நியாயம் கிட்டும் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் எங்களுட...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_421.html

எனது தந்தையின் கொலை தொடர்பில் நியாயம் கிட்டும் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் எங்களுடைய அரசாங்கமே ஆட்சி நடத்துகின்றது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் இந்த வழக்கு எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்கினால் ஏற்றுக்கொள்வேன் என ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரன் தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate