தேர்தல் திருத்தச்சட்டம் தற்போதைக்கு இல்லை! 19வது திருத்தம் நிறைவேற்றப்படும்!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா

புதிய தேர்தல் முறைமை தற்போதைக்கு கொண்டுவரப்பட மாட்டாது என வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நே...

புதிய தேர்தல் முறைமை தற்போதைக்கு கொண்டுவரப்பட மாட்டாது என வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறைவேற்று அதிகாரங்கள் குறைந்த ஜனாதிபதி முறைமை எஞ்சியே உள்ளது.

முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமாயின், பாராளுமன்ற தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட சில அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

தற்போது உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு அமைவாக உத்தேச 19வது திருத்தச்சட்டத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டி காணப்படும் சரத்துக்கள் அகற்றப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதால் அப்பிரச்சினையிலிருந்து வெளிவரக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களில் நிச்சயம் குறைவு ஏற்படும். 19வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைநவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.

19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் தற்போதுள்ள முறைமையிலேயே தேர்தல் நடைபெறும். தேர்தல் முறைமை தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக இந்த 19வது திருத்தச்சட்ட நடைமுறையின் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தேர்தல் முறைமையொன்று அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

தற்போதைக்கு தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க கோவை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவையொன்றைத் தயாரிப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப...

சரத் பொன்சேகா தாக்கல் செய்த ரீட் மனு தள்ளுபடி

ஜனாதிபதி தனக்கு பொதுமன்னிப்பு வழங்கியதால், தனக்குரிய நாடாளுமன்ற ஆசனத்தை வழங்குமாறு கோரியும், நாடாளுமன்ற செயலாளருக்கு அது தொடர்பில் உத்தரவொன்றை பிறக்குமாறும் கோரியும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக...

முதல்வர் விக்னேஸ்வரனிடம் விளக்கம் கேட்கக் கூடாது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு நிதி கொடுக்கப்பட்டதாக வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளதாக ச...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item