ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுக்கு முதலமைச்சருக்கு அழைப்பில்லை! - மகிந்தவின் பாதையில் மைத்திரி அரசும்?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு...


மயிலிட்டி கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச மீள்குடியமர்வு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நோக்கிலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருவது தொடர்பாக எதுவும் தனக்கு தெரியாது என தெரிவித்துள்ள வடக்கு முதல்வர், அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.