மகிந்த ராஜபக்சவின் அதிகார பேராசை திட்டம் தோல்வியில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி, மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியாக அழிப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் வழிக்காட்டலின் கீழ் மேற...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்தி, மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியாக அழிப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழ்ச்சிகள் ஜனாதிபதிக்கு சவால்கள் அல்ல என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

நுகேகொடையில் 15 ஆயிரம் மக்களை கூட்டி மகிந்த ராஜபக்சவுக்கு பாரிய மக்கள் ஆதரவு இருப்பதாக காட்ட முயற்சிக்கப்பட்டது.

இதன் பின்னர் நடத்தப்பட்ட அப்படியான கூட்டங்கள் வெற்றியளிக்கவில்லை என பொலிஸாரின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நுகேகொட கூட்டத்திற்கு பின்னர் கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மாத்திரமே கலந்து கொண்டனர்.

இதனையடுத்து அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் 7 ஆயிரம் பேர் மாத்திரமே கலந்து கொண்டதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இருக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை வரவழைத்ததன் மூலமே இந்த கூட்டமும் சேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

நுகேகொட மற்றும் கண்டியில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டவர்களே இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ராஜபக்ச அலை என்பது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்அவுட்கள் மூலம் உருவாக்கி காட்டிய போலி அலை என்பது தெளிவாகியுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது மகிந்தவுடன் வலம் வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதை தவிர அவர்களுக்கு மாற்று வழி கிடையாது எனவும் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related

நாட்டில் நாகரீகமான அரசியல் கலாசாரம் உதயமாகும் சந்தர்ப்பத்தில் இம்முறை சுதந்திர தினம்– பிரதமர்

நாகரீகமான அரசியல் கலாசாரம் உதயமாகிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். இலங்கையின் முதலாவது பிரதமர் தேசப்பிதா டி.எஸ்.ச...

சுபிட்சத்துக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொள்வோம்! - ஜனாதிபதிசுதந்திர தின செய்தி

நேர்மை மற்றும் நல்லாட்சியின் ஒளியில் சமாதானம், சுதந்திரம் மற்றும் சுபிட்சத்துக்கான ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியில் நாம் இணைந்து கொள்வோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item