ஸ்ரீ.சு.கவின் திட்டமிடல் குழுவின் தலைவியாக சந்திரிக்கா நியமனம்

  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜானாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங...


 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் தலைவியாக முன்னாள் ஜானாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கொள்கை மற்றும் திட்டமிடல் குழுவின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினராக விதுர விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய வடிவமைப்பின் கீழ் செயற்படுவதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குறித்த குழுவின் தீர்மானத்திற்கமையவே எதிர்வரும் பொது தேர்தலில் செயற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
சுதந்திரக்கட்சியினர் சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முற்போக்கான அரசியல்வாதிகள் சிலர் தமக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வாய்ப்பை கோரியுள்ளனர்.
இவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவதுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், படித்த இளையோர் மற்றும் பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

Related

இலங்கை 8653632146734266654

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item