வெலே சுதா மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை

சமந்த குமார என்ற வெலே சுதா மீது போதைப் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முறையில் முதலீடு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான ...

சமந்த குமார என்ற வெலே சுதா மீது போதைப் பொருள் விற்பனையில் பெற்ற பணத்தை சட்டவிரோத முறையில் முதலீடு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கான விசாரணையை மேலும் தொடர்வதற்கு போதியளவு சாட்சியங்கள் இல்லை என பிரதிவாத தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி தேவிகா தென்னகோன் அவர்கள் முன்னிலையில் இன்று விசாரணை எடுத்துகொள்ளப்பட்டது.

அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் ஒரு குற்றப்பத்திரிகையில் உள்ளடக்குவது சட்டவிரோத செயல் என்றும் அவை வெவ்வேறாக இருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

வெலே சுதாவுக்கு எதிரான 57 குற்றச்சாட்டுக்கள் ஒரே குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெலே சுதா சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் ஒரே சம்பவத்தில் இந்த 57 குற்றச்சாட்டுக்களும் இருப்பதால் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் விளக்கமளித்துள்ளதுடன், அது சட்டவிரோத செயலல்ல என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

இரு தரப்பு கருத்துக்களையும் பரிசீலித்த நீதிபதி, எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்ததுடன் வெலே சுதாவை பொலிஸ் காவலிலும், அவரது மனைவி மற்றும் உறவு சகோதரியை தொடர்ந்து விளக்கமறியலிலும் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related

சுதந்திர கட்சியில் மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்காதிருக்க இறுதி தீர்மானம் - சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காதிருக்க இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க தெரிவித்துள்ளார்....

SLFP கட்சியின் பல உறுப்பினர்கள் UNP யுடன் இணைய முடிவு : மஹிந்த வேட்பு மனுவுக்கு எதிர்ப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பல உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஜனாதிபதி மைதிரியினால் வேட்பு மனு வழங்கப் பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளதீர்மானித்துள்ளதாக முன்னா...

மஹிந்தவின் வேட்புமனு தொடர்பில் சுசில் பிரேமஜயந்த மீது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தேகம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த மீது ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. தமது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இரகசிய கூட்டம் தொடர்பில் கேள்வ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item