சிகிரியா ஓவியத்தில் பெயர் எழுதிய யுவதிக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி கிழக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு கடிதம்

மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (வயது-27) என்ற யுவதி சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில்...


மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி (வயது-27) என்ற யுவதி சிகிரியா ஓவியத்தில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
சிறைவாசம் அனுபவிக்கும் குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்குதல் தொடர்பாக இன்று கொழும்பில் வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் முக்கிய அமைச்சர்கள் பலருடனும் கலந்தாலோசனை நடத்தினார்.

குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய தேவையான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்ளவுள்ளதாக கூறிய முதலமைச்சர், இதன் பின்னர் சிகிரியா மாத்திரமன்றி எங்கு சுற்றுலா சென்றாலும் சட்ட, விதிமுறைகளை மாணவர்களுக்கு அல்லது தம்முடன் அழைத்துச் செல்லும் ஏனையோருக்கு அறிவுரையாக வழங்கி அழைத்து செல்லுதல் கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கல்முனை மாணவி ஒருவரும் குறித்த சிகிரிய சுவரில் எழுதியதால் கைது செய்யப்பட்டு பலரின் முயற்சிகளுக்கு மத்தியில் விடுதலை செய்யப்பட்டதும் நானறிந்தேன்.

ஆனால் மீண்டும் கல்முனை பாடசாலை மாணவிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்ததுள்ளது.

அது சம்மந்தமாகவும் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்களை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் தெவித்தார்.

Related

சிங்கள ராவய அமைப்பு மீது போலீசார் தாக்குதல்..

பலாங்கொட, ஜெய்லானி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரி...

ஹொரணையில் கூட்டம்! ஒரே மேடையில் சந்திக்கும் மைத்திரி, சந்திரிகா, மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி ஒரே மேடையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஹொரணையில் இந்தக் கூ...

19ம் திருத்தம்: எவ்வாறு பௌத்த மதம் அழிக்கப்படும் என்பதனை தினேஸ் விளக்க வேண்டும்!- புதிய திருத்தம் உள்ளடக்கம்!- ராஜித

19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக எவ்வாறு பௌத்த மதம் அழிக்கப்படும் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன விளக்க வேண்டுமென சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item