ஐந்து ஆண்டுகளாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மதபோதகர்!

தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோ...

தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோகம் செய்து வந்தார் என்று 20 வயது யுவதி ஒருவர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று மாலை செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த யுவதியும், யுவதியை சிறு வயதில் பராமரித்து வந்த பெண் ஒருவரும் இணைந்து இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த யுவதி வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி தனது தாய், தந்தையை இழந்த நிலையில் வேறு ஒருவரின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்து வந்த நிலையில் அவர் தொடர்ந்து கற்பதற்காக கிறிஸ்தவ சபை ஒன்றின் பராமரிப்பு நிலையத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு அவரது 11 ஆவது வயதில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் மதபோதகர், பராமரிப்பு நிலையில் இருந்து குறித்த யுவதியை பொறுப்பெடுத்து தனது வீட்டில் வளர்த்து வந்தார் என்றும், மதப்போதகரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த யுவதியை மிரட்டி (அப்போது 15 வயது) பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனவும், ஐந்து வருடங்களாக இவ்வாறு தொடர்ச்சியாகத் தான் துன்புறுத்தப்பட்டுவந்தார் எனவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வருவதை அனுமதிக்க முடியாது: புரவெசி பலய அமைப்பு

உறுப்பினர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிப்பதனை அனுமதிக்க முடியாதென புரவெசி பலய அமைப்பு தெரிவித்துள்ளது. மருதானை பி...

போட்டியிடாமல் இருப்பது நல்லது! மஹிந்தவை மிரட்டிய மைத்திரி

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று மஹிந்தவுக்கு, ஜனாதிபதி மைத்திரி தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மஹிந்தவை தொலைபேசி மூலம் தொடர்பு நேற்றிரவு கொண்ட ...

கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ரவூப் ஹக்கீம் நடவடிக்கை

கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் உரிய கவனம் செலுத்துமாறு தமது அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item