மகிந்தவா - மைத்திரியா சர்வாதிகாரி? - விமல் வீரவன்ச கேள்வி.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருக்கும் இன்றைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா அல்லது ம...

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று அதிகாரங்களையும் தன்வசம் வைத்திருக்கும் இன்றைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா அல்லது முந்தைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ.

நாராஹேன்பிட்டிய அபயராமயவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.நாடு அரசியல் ரீதியாக மிகவும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர், பிரதமரையும் நியமித்து,எதிர்க்கட்சித் தலைவரையும் தெரிவு செய்து கொண்டு மூன்று அதிகாரங்களையும் தம்வசம் வைத்துள்ள அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் காணப்படுகிறது.

முழு நாடாளுமன்றமும் தேசிய அரசாங்கமாக ஒன்றிணைந்திருக்கும் அனுபவங்களை உலக நாடுகள் கொண்டுள்ளன. ஆனால், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை போன்ற அரசாங்க அனுபவங்களை உலக நாடுகள் கொண்டிருக்காது. சிங்கப்பூர் போன்ற தேசிய அரசாங்கம் ஆட்சி செய்யும் நாடுகளில் பெயரளவிலாவது தனியான எதிர்க்கட்சித் தலைவர் பிரதிநிதித்துவம் செய்கிறார். இலங்கையின் மூன்று அதிகார கேந்திரங்களையும் ஒரு இடத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால், தற்போதைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா அல்லது முந்தைய அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமா என்ற கேள்வி எழுகிறது.

நல்லாட்சி ஐயாமார் சர்வாதிகார அரசாங்கம் என்று வர்ணிக்கும் கடந்த அரசாங்கம் அந்த மலையும் என்னுடையது, இந்த மலையும் என்னுடையது என்று அனைத்தை பிடித்து வைத்திருக்கவில்லை. கடந்த அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் 150க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது. தேவையிருந்தால், தனியான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இலகுவாக பறித்திருக்கலாம்.

எனினும் கடந்த அரசாங்கம் அப்படி செய்யவில்லை. அப்படி செய்யாத அரசாங்கத்தை இந்த நல்லாட்சி துரைமார் சர்வாதிகார அரசாங்கம் என்கின்றனர். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளை கைப்பற்றியுள்ள இந்த அரசாங்கத்தை எப்படியான சர்வாதிகார அரசாங்கம் எனக் கூறுவது எனவும் விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

Related

13ஆம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்!- இந்திய பிரதமர் அழுத்தம்(video)

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட்டு அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவுக்கான உத...

இலங்கை வந்தடைந்தார் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார். இந்திய பிரதமரை வரவேற்பதற்காக பிரதமர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையான முக்கியஸ்தர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுமி...

இலங்கை வரும் மோடி மகிந்த ராஜபக்சவுடன் இரகசிய சந்திப்பு? -இந்திய ஊடகம்

இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை ரகசியமாக நேரில் சந்தித்து பேசக் கூடும் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை செல்கிற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item