எதிர்வரும் 17ஆம் திகதியின் பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான முன்னணி ஆயத்தமாகவதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பொலனறுவை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொலனறுவை மாவட்ட முஸ்லிம்கள் தமக்கு வழங்கிய அமோக ஆதரவு குறித்து ஜன...
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று வரை 92 பேர் கொலை செய்யப்பட்டுள்ளர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவ...
இலங்கையில் யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான நிவாரணங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் போதிய அளவுக்கு கிடைக்கவில்லை எனும் கவலைகள் தொடருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
முப்பது வருடங்களாகத் த...
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் சடலம் சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்டது.தெஹிவளை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியிலிருந்து சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.பொலிஸ் பாதுகாப்புக்கு மத்...
உலகளவில் இசைத்துறையில் நோபல் பரிசு என்று கருதப்படும் போலார் மியூசிக் விருது இந்த ஆண்டு இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எவ்லின் க்ளெனி
ஸ்கொட்லாந்தின் பிரபல தாள வாத்தியக் கலைஞரான டேம் எவ்லின் க்ளெனி மற்றும் அமெரிக்காவின் நாட்டுப்புற இசைக் கலைஞர் எமிலோ ஹாரிஸ் ஆகியோரே இந்த ஆண்டுக்கான விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் எவ்லின் க்ளெனி முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவுக்கு கேட்கும் திறணை இழந்தவர் என்பதும், அப்படிப்பட்ட ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எவிலின் தனது 12 வயது முதல் கேட்கும் திறணை இழந்திருந்தார் என்பதுடன் இசைக்காக வழங்கப்படும் இந்த உயரிய விருதை அவர் பெறுகின்றமை அனைவரையும் பெரும் மகிழ்சசியடைய செய்துள்ளதுடன் ஏனைய கலைஞர்களுக்கு அது ஊக்கமளிப்பதாகவும் உள்ளது என்று விருது வழங்கும் குழுவினர் கூறுகிறார்கள்.
தாளவாத்திய இசையில் உலகளவில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளார் எவ்லின் க்ளெனி
விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி என்றாலும் இசைத்துறையில் தான் இன்னும் எட்டவேண்டிய உச்சங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன என்று அவர் கூறுகிறார்.
எவ்லின் க்ளெனி முழுமையாக கேட்கும் திறணை பெருமளவில் இழந்திருந்தாலும், தாள வாத்தியங்கள் மீதான காதல் மட்டும் அவருக்கு சிறிதும் குறையவில்லை.
தாள வாத்தியங்கள் இசைப்பதை முழு நேர தொழிலாக ஆரம்பிக்கும் போது அதற்கான வாய்ப்புகள் மிக எளிதாகவே காணப்பட்டதாக கூறிய ஐம்பது வயதை எட்டிய எவிலின் இந்த அங்கீகாரம் தமக்கு வாய்ப்புக்களை மென்மேலும் பெருக்கிக் கொடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
முப்பதுக்கும் அதிகமான இறுவெட்டுக்களை வெளியிட்ட எவ்லின் மூன்று முறைகள் கிராமி விருதுகளையும் வென்றுள்ளார்.
லண்டனில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் எவ்லின் தனிநபராக தாளவாத்திய இசைக் கச்சேரி செய்து முழு உலகின் கவனத்தையும் தன்வசம் ஈர்த்திருந்தார்.
"அமெரிக்காவின் பிரதிபலிப்பு"
இதேவேளை இவருடன் கூட்டாக இந்த ஆண்டுக்கான போலார் இசை விருதை வென்றுள்ள எமிலோ ஹரிஸ் கிராமி விருதுகளை 13 தடவைகள் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான போலார் இசை விருது வென்றுள்ள எவ்லின் மற்றும் எமிலோ
எவ்லின் க்ளெனி தனது 12ஆவது வயதில் கேள்வித் திறனை இழந்திருந்தாலும் அவருக்கு பரந்துபட்ட அளவில் இசையின் புரிதல் உள்ளது என்றும், எமிலோ ஹாரிஸின் இசை பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்காவின் நிலப்பரப்பை பிரதிபலிக்கிறது என்றும் விருதுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
1992 முதல் இசைக்காக வழங்கப்பட்டு வரும் ‘போலர் இசை விருது' பாரம்பரிய இசைக்காக மட்டும்மல்லாமல் பல வகைகளில் இசைத்துறையில் கட்டுடைப்புகளைச் செய்தவர்களுக்கும், தனித்துவமான வகையில் சாதனைப் படைத்துள்ளவர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது எதிர்வரும் ஜூன்மாதம் 9ஆம் தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அந்நாட்டு அரசரால் வழங்கப்படவுள்ளது.
பிரபல ஸ்வீடிஷ் இசைக் குழுவான அபாவின் மேலாளராக ஸ்டிக் ஆண்டர்சன் போலார் வருடாந்திர இசை விருதை உருவாக்கினார்.
நடிகராக மாறியுள்ள உலக மல்யுத்த வீரரான டுவைன் ஜோன்சன், ‘சான் அன்ட்ரியாஸ்’ என்ற அதிரடி சண்டைப் படத்தில் நடித்துள்ளார்.
அப்படத்தின் முன்னோட்ட காட்சி, லண்டனில் நடைபெற்றது.
அப்போது அவர் தனது திறமையை கா...
இந்தோனேசியாவில் வெடித்தது போராட்டம் : அஸ்வின் விராத்து உருவ பொம்மை எரிப்பு....!!
பர்மாவில் புத்த மத பயங்கரவாதிகளால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு ஆய...
அச்சத்தின் காரணமாக மியன்மாரில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறிவரும் நிலையில் அதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச ஊடகங்கள் சிலவும் மியன்மார் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை...