நாட்டில் அமுலில் உள்ள ஷரிஆ சட்டம் மற்றும் தேசவழமை சட்டங்களை தடை செய்ய மாட்டோம் : நீதியமைச்சர்

நாட்டில் அமுலில் உள்ள முஸ்லிம்களின் ஷரிஆ சட்டம் மற்றும் தமிழர்களின் தேசவழமை சட்டகங்கள் ஆகியவற்றை தடை செய்ய மாட்டோம் என  நீதி­ய­மைச்சர் விஜே­...

நாட்டில் அமுலில் உள்ள முஸ்லிம்களின் ஷரிஆ சட்டம் மற்றும் தமிழர்களின் தேசவழமை சட்டகங்கள் ஆகியவற்றை தடை செய்ய மாட்டோம் என  நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக்ஷ தெரிவிதுள்ளதுன்  தற்­போது அமுலில் உள்ள ரோமர் சட்­டங்­களில் விரைவில் திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் தெரி­வித்துள்ளார் .

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஏ.எச்.ஜீ. அமீன் எழு­திய ”திரு­ம­ணத்தின் கோட்­பாடும் தத்­து­வார்த்­தங்­களும் கார­ணமும்” (Concept of Marriage- Logic and Reson) என்ற நூல் வெளி­யீட்டு விழா நேற்று புதன்­கி­ழமை நீதி­ய­மைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இந் நிகழ்வின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­வித்த போதே அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில், இலங்கையின் வர­லாற்றுக் காலம் தொடக்கம் இனத்­துவ மத அடிப்­ப­டை­யி­லான சட்­டங்கள் அமுலில் இருந்து வந்­துள்­ளன. தேசவழமை, ஷரிஆ சட்­டங்­களும் இதில் அடங்கும். போர்த்துக்­கேய, ஒல்­லாந்த மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்களும் இச் சட்­டங்­களை ஏற்­றுக்­கொண்டு அங்­கீகாரம் வழங்­கி­யுள்­ளனர்.

எனவே, எவ­ரது தேவைக்­கா­கவும் காலம் கால­மாக நடை­மு­றையில் ஒரு இனத்­தவர் மதத்­தவர் அனு­ப­வித்து வந்த சட்­டங்­களை தடை செய்ய முடி­யாது. இச் சட்­டங்கள் நாட்டில் தொடர்ந்து அமுலில் இருக்கும். இதற்கு இடை­யூறு விளை­விக்­க­மாட்டோம்.

நீதி­மன்­றங்­களில் தற்­போது சிவில் மற்றும் குற்­ற­வியல் வழக்­குகள் பெருந் தொகையில் தேங்கிக்கி­டக்­கின்­றன. இதற்குக் காரணம் தற்­போது நாட்டில் 200 வரு­டங்கள் பழைமை வாய்ந்த ரோமர் சட்­டங்­களே அமுலில் உள்­ளன.

இதன் சட்­ட­வாக்­கங்கள் தீர்ப்­புக்­களை வழங்­கு­வதை தாம­தப்­ப­டுத்­து­கின்­றன. அன்­றைய காலகட்டத்­திற்கு ஏற்­ற­வாறே சட்­டங்கள் தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனவே தான் வழக்­குகள் தேங்கிக்கிடக்­கின்­றன. இதனை கருத்தில் கொண்டு ரோமன் சட்­டங்­களில் விரைவில் திருத்தங்களை கொண்டுவர­வுள்ளோம். அதன் பின்னர் இவ் வழக்­கு­களை விரை­வாக தீர்க்க முடியும்.

கடந்த காலங்­களில் மக்கள் நீதி­மன்­றங்கள் சட்­டங்கள் மீது நம்­பிக்கை இழந்து காணப்­பட்­டனர். இன்று புதிய ஆட்சி மாற்­றத்­துடன் நீதித்துறையின் மீதான மக்­களின் நம்­பிக்­கையை பலப்­ப­டுத்தி வரு­கின்றோம். கடந்த காலங்­களில் இலஞ்ச ஊழல் திணைக்­களம் என்று ஒன்று இருந்­ததா என்­பது கூட கேள்விக்குறி­யா­கவே இருந்­தது. இத் திணைக்­க­ளத்­திற்கு 5000 க்கும் மேற்­பட்ட முறைபாடுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

ஆனால், எது­வுமே விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை. ஒரு சில அதி­கா­ரி­களின் அச­மந்தப் போக்­கி­னாலும் பக்­கச்­சார்புத் தன்­மை­யி­னாலும் இம்­மு­றைப்­பா­டுகள் விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு செயற்பட்ட அதி­கா­ரிகள் தற்­போது வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். புதி­ய­வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related

இலங்கை 2461546581078579659

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item