கிழக்கில் மலர்கிறது தமிழர்களின் ஆட்சி - TNA ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள...

tnaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர், புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமது நிலைப்பாடு தொடர்பில் எடுத்துரைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம்தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கில் தமிழ் மக்கள் சார்பாக 11 உறுப்பினர்கள் மாகாண சபையில் உள்ளனர். இருந்தும் கடந்த கலங்களில் இந்த சபை தமிழ் மக்கள் விடயத்தில் மிகவும் பாரபட்சமாக நடந்துகொண்டமை வேதனைக்குரியது.

தமிழ் மக்களின் அபிவிருத்தியிலும் நியமனத்திலும் இடமாற்றத்திலும் கிழக்கில் பாரிய புறக்கணிப்புகள் நடந்தேறின. கிழக்கில் குரல் கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இம்முறையும் அதேபோன்றதொரு தவறைச் செய்ய நாம் விரும்பவில்லை. எனவே ஜனாதிபதி பிரதமரிடம் இது பற்றிக் கூறி தார்மீகக் கடமையைச் செய்யுமாறு வேண்டவுள்ளோம்.

சிலவேளை அரைவாசிக் காலத்திற்கு எம்மையும் மீதிக் காலத்திற்கு மு. கா.வும் முதலமைச்சர் பதவியை வகிக்குமாறு கோரப்படுமாயின் எமக்கே முதல் காலப் பகுதி வழங்கப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாகவிருக்கின்றோம்.

நாம் வெறுமனே பதவிக்காகவும் சுகபோகத்திற்காகவும் சண்டை பிடிப்பவர்களல்ல. பதவிகளுக்காக நாம் ஆசைப்பட்டவர்களல்ல. மத்திய அரசில் கிடைத்த அமைச்சைக்கூட நாம் ஏற்கவில்லை.

நாம் சீரிய கொள்கையுடையவர்கள். எமது மக்களின் உணர்வலைகளோடு சமாந்தரமாக பயணிக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் எமக்குண்டு. அதனை கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படையாக அமோக ஆதரவைத் தெரிவித்துக் காட்டியுள்ளனர்.

எனவே எமக்கு சாதகமான முடிவு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related

ஜனாதிபதி மைத்திரி வைக்கும் தொடர்சியான ஆப்பு!!

மைத்திரி அரசு பதவி ஏற்றதும் நாள் தோறும் புது புது சட்ட விடயங்களை அமுல் படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக மகிந்த குடும்பம் மற்றும் பொன்சேகா உட்பட்ட பலருக்கு நெருக்கடியை தரும் வகையில் புதிய சட்டட...

பிரபாகரனுக்கு 2 ஆண்டுகள் 9 மாதங்கள்!! மஹிந்தவுக்கு 2 ஆண்டுகள் 8 மாதங்கள்!

பிரபாகரனிடமிருந்து நாட்டை மீட்பதற்காக 2 ஆண்டுகளும் 9 மாதங்களும் தேவைப்பட்டன. தெற்கு பயங்கரவாதியிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற 2 ஆண்டுகளும் 8 மாதங்களுமே தேவைப்பட்டன என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்....

அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் தோற்றுப்போன அமைச்சர் ரவுப் ஹக்கீம்

இன்று இன்னும் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹஸன் அலிக்கு ராஜாங்க அமைச்சுப் பதவியும், எம்.எஸ்.தௌபீக்கிற்கு பிரதி அமைச்சும், அகில இலங்கை...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item