தன்னையும் ஜனாதிபதி என்றே அழைக்கின்றனராம்!

தம்மை தமது ஊர் மக்கள் தற்போது ஜனாதிபதி என்றே அழைப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று உருவ ஒற்றுமை கொண்...

MRRSதம்மை தமது ஊர் மக்கள் தற்போது ஜனாதிபதி என்றே அழைப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்று உருவ ஒற்றுமை கொண்ட ஆர்.ஏ சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த,மைத்திரி என்ற இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு அப்பால் பேசப்பட்ட ஒருவரே ஆ.ஏ சிறிசேன என்ற வேட்பாளராவார்.

உருவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒத்த உருவத்தைக் கொண்ட இவர், மைத்திரிபாலவின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டவர். இவர், மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான மெதமுலனவைச் சேர்ந்தவர்.தேர்தலின் போது பலர் சிறிசேன என்ற பெயரை கண்டு இவருக்கும் வாக்களித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் கொழும்பின் ஊடகம் ஒன்று அண்மையில் அவரை செவ்வி கண்ட போது தம்மை தமது ஊர் மக்கள் தற்போது ஜனாதிபதி என்றே அழைப்பதாக குறிப்பிட்டார். தம்மை யாரும் தேர்தலில் போட்டியிடுமாறு கோரவில்லை.தாம் தொலைக்காட்சி நகைச்சுவை நாடகங்களில் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரத்துக்கு நடித்து புகழ் பெற்றமையால் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

தமது பிரசாரத்துக்காக 5 லட்சம் ரூபாய்கள் செலவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாம் தேர்தலில் 18ஆயிரத்து 174 வாக்குகளை பெற்றுள்ளமையால் தாமே நாட்டில் மூன்றாவது முக்கியமானவர் என்று நினைப்பதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related

நான் வந்ததும் முன்கதவால், செல்வதும் முன்கதவால் தான்!- பிரதமர்

தனக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுக்க தான் எப்போதும் தயார் எனவும், பிரதமர் பதவிக்கு தான், பின்கதவால் வந்தவர் அல்ல எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெர...

நாமல் கூறுவது பொய்: பொலிஸ் ஊடக பேச்சாளர்

தன்னை எதிர்வரும் 12ம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். தனது டுவிட்டர் கணத்தில் இதனை பத...

கட்சித்தாவுமாறு தொந்தரவு கொடுக்கும் மனைவி – ஹோட்டலில் தங்கும் கெஹெலிய

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ன கோஷம் போட்டாலும் அவரால் மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியாது என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாக தெரியவந்துள்ளது. ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item